பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
00:29
ஜாம்ஷெட்பூர் : வேதாந்தா நிறுவனம், உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜார்க்கண்ட் கனிமவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, உருக்கு தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மேற்கு சிங்கபூம் மாவட்டம், மனோகர்பூரில் ஆலை அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜார்க்கண்டில், உருக்கு தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக, அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இம்மாநில கனிம வள நிறுவனத்துடன் இணைந்து, ஆலை அமைக்கப்படும். இதற்காக, மொத்தம், 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
முதற்கட்டமாக, 700 கோடி ரூபாய் முதலீட்டுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மூன்று ஆண்டுகளில், உற்பத்தி துவங்கும். இதன் மூலம், அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|