பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
00:31
புதுடில்லி : அல்காடெல் நிறுவனம், ‘டேப்லட்’ கம்ப்யூட்டர் விற்பனையின் மூலம், ஒரு கோடி டாலர் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது. ‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில் ஈடுபட்டு வரும், அல்காடெல், டேப்லட் சாதனங்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், சமீபத்தில், புதிய மாடலில், டேப்லட் சாதனத்தை அறிமுகம் செய்தது.
இது குறித்து, அல்காடெல் அதிகாரி பிரவீன் வலேசா கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், புதிய டேப்லட் சாதனங்களை விற்பனை செய்கிறது. இதன் மூலம், இந்திய டேப்லட் சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 10 சதவீதமாக உயரும்; டேப்லட் விற்பனை மூலம், ஒரு கோடி டாலர் வருவாய் ஈட்டப்படும்,’’ என்றார்.
இந்தியாவில், டேப்லட் விற்பனையில், டேட்டாவிண்ட், 34 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, ஐ பால், 16 சதவீதம்; சாம்சங், 15 சதவீதம் என்றளவில் உள்ளன. நடப்பு ஜன., – மார்ச் வரையிலான காலத்தில், 7.60 லட்சம் டேப்லட் சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 16 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|