பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
23:42
புதுடில்லி : இந்திய ஜவுளித் துறை கூட்டமைப்பின் தலைவர், ஜே.துளசிதரன் கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியில், செயற்கை நுாலிழைகளுக்கு, 18 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதை, 12 சதவீதமாக குறைக்க, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய வருவாய் செயலர் ஹஸ்முக் அதியா ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய வரி வதிப்பால், செயற்கை நுாலிழை மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களின் லாபம் பாதிக்கப்படுவதோடு, அவர்கள், சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளிடம் சந்தை வாய்ப்பை இழக்க நேரிடும்.
இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., வரியை விட, 166 நாடுகளில் வரி குறைவாக உள்ளது. இத்தகைய சூழலில், அதிக வரி விதிப்பு காரணமாக, செயற்கை நுாலிழை மற்றும் செயற்கை ஜவுளித் துறை கடுமையாக பாதிக்கப்படும். அவற்றின் ஏற்றுமதி குறையும். எனவே, வரியை, 12 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|