பதிவு செய்த நாள்
23 ஜூன்2017
00:40
சென்னை : கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், ரெப்கோ வங்கியின் மொத்த வர்த்தகம், 13,500 கோடி ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், பொதுத் துறை வங்கியான, ரெப்கோ வங்கி, 2016 – 17ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: கடந்த நிதியாண்டில், வங்கியின் மொத்த வர்த்தகம், 13,500 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் வங்கியின் வைப்புநிதி, 8,166 கோடி ரூபாயாகவும், வழங்கப்பட்ட மொத்த கடன், 5,349 கோடி ரூபாயாகவும் உள்ளது. வங்கியின் மொத்த வருமானம், 1,021 கோடி ரூபாய். நிகர லாபமாக, 121 கோடி ரூபாய் ஈட்டப்பட்டு உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு, 642 கோடி ரூபாய்.
வாராக்கடனை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் முடிவில், வங்கியின் மொத்த வாராக்கடன், 5.61 சதவீதமாகவும், நிகர வாராக்கடன், 1.16 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிதிநிலை குறித்து, ரெப்கோ வங்கியின் செயல் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வகிக்கும், ஆர்.எஸ்.இஸபெல்லா கூறுகையில், ‘‘மந்தமான உலக பொருளாதார சூழல், சவாலான உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி ஆகியவை, வங்கி துறையின் செயல்பாட்டையும், லாப வளர்ச்சியையும் மிகவும் பாதித்த சூழலிலும், ரெப்கோ வங்கி, தன் சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|