பதிவு செய்த நாள்
23 ஜூன்2017
00:41
புதுடில்லி : ‘இந்தியாவில் மின்னணு வர்த்தகம், இந்தாண்டு டிசம்பருக்குள், 2,20,330 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும்’ என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், ‘டிஜிட்டல் காமர்ஸ்’ எனப்படும், மின்னணு வர்த்தகம் குறித்து, ஐ.எம்.ஏ.ஐ., மற்றும் ஐ.எம்.ஆர்.பி., நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு, வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் மின்னணு வர்த்தகம், ஆண்டுக்கு சராசரியாக, 30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2016ல், 1,68,891 கோடி ரூபாயை எட்டியது. இது, இந்தாண்டு, 30.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, டிசம்பரில், 2,20,330 கோடி ரூபாயாக உயரும்.
மின்னணு வர்த்தகத்தில், பயண டிக்கெட் பிரிவின் பங்கு, 50 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு, இப்பிரிவின் வர்த்தகம், 95,198 கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தாண்டு, 24 சதவீதம் உயர்ந்து, 1,18,598 கோடி ரூபாயாக உயரும். இதே காலத்தில், வலைதளம் வாயிலான சில்லரை விற்பனை, 59 சதவீதம் வளர்ச்சி கண்டு, 59,876 கோடி ரூபாயில் இருந்து, 94,964 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
டி.டி.எச்., தொலைபேசி, மின்சாரம் போன்ற வசதிகளுக்காக, மின்னணு முறையில் செலுத்தும் பணம், 6,277 கோடி ரூபாயில் இருந்து, 7,532 கோடி ரூபாயாக உயரும்.திரைப்பட டிக்கெட் பதிவு, மளிகை சாமான் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வலைதள சேவை வர்த்தகம், இந்தாண்டு, 4,587 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|