பதிவு செய்த நாள்
28 ஜூன்2017
00:33
புதுடில்லி: இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் செகரட்டரி ஜெனரல், பிரவீன் கந்தல்வால் கூறியதாவது: தொழிற்நுட்ப அடிப்படையிலான, ஜி.எஸ்.டி., நடைமுறையை, சிறிய வர்த்தகர்கள் புரிந்து கொண்டு செயல்படுவதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இன்னும், 60 சதவீத வணிகர்கள், தற்போதைய வர்த்தகத்தை கணினிமயம் ஆக்காமல் உள்ளனர்.
அதனால், ஜி.எஸ்.டி.,அமலுக்கு வரும், ஜூலை, 1 முதல், 2018 மார்ச், 31 வரையிலான, ஒன்பது மாத காலத்தை, பயிற்சி காலமாக அறிவிக்க வேண்டும். இடைபட்ட காலத்தில், ஜி.எஸ்.டி., நடைமுறையில் ஏற்படும் தவறுகளுக்கு, வணிகர்கள் மீது, எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.அடுத்த இரு ஆண்டுகளை, வரி மாறுதல் காலமாக பிரகடனம் செய்ய வேண்டும்.
பிற அமைப்புகளுக்கு உள்ளது போல, வணிகர்கள், ஜி.எஸ்.டி., குறித்த புகார்களை தெரிவிக்க, குறை தீர்ப்பு மன்றம் அல்லது லோக்பால் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|