பதிவு செய்த நாள்
28 ஜூன்2017
00:34
புதுடில்லி: ஜூலை, 1ல் அறிமுகமாகும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியில், கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவை சேர்க்கப்படவில்லை.
மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, கூடுதல் வரிச்சுமை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிறுவனங்கள், பிற நிறுவனங்களை போல, கொள்முதல் செய்யும் சரக்குகள், பெறும் சேவைகள் ஆகியவற்றுக்கு, ஜி.எஸ்.டி.,யின் கீழ், உள்ளீட்டு வரியை பெற முடியாது. அதே சமயம், எண்ணெய், எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையில், உற்பத்தி வரி, ‘வாட்’ வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்த வேண்டும்.
இதனால் ஏற்படும் இழப்பை தடுக்க, எரிவாயுவை மட்டும், ஜி.எஸ்.டி.,யில் சேர்க்க வேண்டும் என, எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம், இழப்பில், 20 சதவீதம் குறையும் என, அவை தெரிவித்து உள்ளன. இது குறித்து, 30ம் தேதி, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|