பதிவு செய்த நாள்
30 ஜூன்2017
15:14
புதுடில்லி : வங்கி கணக்கு வைத்திருப்போர் மற்றும் வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவரும் ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது. இதனால் ஜூன் 30 தான் கடைசி தேதி என நினைத்து மக்கள் அவசர அவசரமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்தனர்.
இந்நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் செல்லுபடியாகும் என மத்திய நேரடி வரி விதிப்பு கழகம் இன்று தெரிவித்துள்ளது. ஆதார் எண் - பான் கார்டு இணைப்பிற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேரடி வரி விதிப்பு கழகத்தின் தலைவர் சுசில் சந்திரா கூறுகையில், ஆதார் எண் இணைக்கப்படா விட்டாலும் ஜூன் 30 க்கு பிறகு பான் கார்டுகள் செல்லும். விரைவில் ஒரு குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படும் அந்த தேதி வரையிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லும். அந்த குறிப்பிட்ட தேதிக்கு பிறகும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளே செல்லாதவையாகவோ அல்லது காலாவதியானதாகவோ கருதப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|