பதிவு செய்த நாள்
02 ஜூலை2017
09:49
விருதுநகர்: விருதுநகர் சந்தையில் வத்தல் விலை குறைந்தது. நாட்டு உளுந்து விலை உயர்ந்தும் விற்பனையானது.
சந்தையில் விலை நிலவரம்:
கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.1,800, நல்லெண்ணெய் ரூ.2,100, சன்பிளவர் எண்ணெய் ரூ.1,250, பாமாயில் ரூ.930.
80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா ரூ.5,700, மிட்டாய் ரகம் ரூ.7,00௦. 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4,200. சர்க்கரை ரூ.4,180.
90 கிலோ மைதா ரூ.3,145, ரவை ரூ.3,225. 55 கிலோ பொரி கடலை ரூ.4,610. 100 கிலோ பர்மா உளுந்து பொடிவகை ரூ.5,000, பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.6000, நாட்டு உளுந்து ரூ.300 அதிகரித்து ரூ.6,100.
100 கிலோ உளுந்தம் பருப்பு பர்மா பொடிவகை ரூ.7,800, நாட்டு வகை பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ.8,300. பருப்பு வகையில் 100 கிலோ புதியரக முதல்வகை துவரம் பருப்பு ரூ.6,300 (கிலோ ரூ.63), இரண்டாம் வகை ரூ.5,500 (கிலோ ரூ.55).
100 கிலோ முதல்வகை பாசிப்பருப்பு ரூ. 6,600, இரண்டாம் வகை ரூ.6,400. ஒரு குவிண்டால் ஆந்திரா வத்தல் 'ஏசி' ரூ.500 குறைந்து ரூ.6,000 முதல் ரூ.6,500. ஆந்திரா நடப்பு வத்தல் ரூ.500 குறைந்து ரூ.4,000 முதல் ரூ.4,500.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|