பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
01:02
மும்பை : ‘உரத்திற்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டு உள்ளதால், அதன் சில்லரை விற்பனை விலை குறையும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்து உள்ளது.
அதன் விபரம்: கடந்த ஜூன் இறுதி வரை, பெரும்பாலான மாநிலங்களில் உரத்திற்கு, 6 சதவீத வரி விதிப்பு இருந்தது. ஒருசில மாநிலங்கள், உரத்திற்கு, ‘வாட்’ வரியில் இருந்து விலக்கு அளித்திருந்தன.
இந்நிலையில், ‘ஜூலை, 1 முதல், உரத்திற்கு, 12 சதவீத, ஜி.எஸ்.டி., அமலானால், அதன் விலை, 6 – 10 சதவீதம் உயரும்’ என, விவசாயிகள் கூட்டமைப்பு கவலை தெரிவித்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., கவுன்சில், கடைசி நேரத்தில் உரத்திற்கான, ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைத்து நிர்ணயித்தது. இதனால், தற்போது பெரும்பாலான மாநிலங்களில், உரத்திற்கான வரி, 6 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம், 50 கிலோ உர மூட்டையின் விலையில், 3 ரூபாய் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், விலை சற்று உயரக் கூடும். ஏனெனில், இம்மாநிலங்கள், உரத்திற்கு, ‘வாட்’ வரியில் இருந்து விலக்களித்து, 1 சதவீத உற்பத்தி வரி மட்டுமே வசூலித்து வந்தன. தற்போது, ஜி.எஸ்.டி.,யில், 5 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், இந்த மாநிலங்களில், உரத்திற்கான வரி, 4 சதவீதம் உயரும். அதற்கேற்ப, சில்லரை விற்பனையில் உரம் விலை சற்று அதிகரிக்கும் என, தெரிகிறது.
இந்நிலையில், டி.ஏ.பி., மற்றும் என்.பி.கே., யூரியா தயாரிப்பிற்கான மூலப்பொருட்களுக்கு, 18 சதவீத வரி தொடரும் என்பதால், அத்துறை நிறுவனங்கள், நடைமுறை மூலதன பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். இதை தவிர்க்க, உள்ளீட்டு வரியை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|