வரி குறைப்பால் உரம் விலை குறையும்வரி குறைப்பால் உரம் விலை குறையும் ... ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ...
ஜி.எஸ்.டி.,யால் உற்பத்தி உயரும்; அரசின் வரி வருவாய் உயராது: ‘பிட்ச்’ நிறுவனம் மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2017
01:04

மும்பை : ‘புதிய, ஜி.எஸ்.டி., முறை, உற்­பத்­தியை அதி­க­ரித்து, நாட்­டின் நீண்ட கால வளர்ச்­சிக்கு உத­வும் என்ற போதி­லும், குறு­கிய காலம் வரை, வரி வரு­வாய் உய­ராது’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘பிட்ச்’ தெரி­வித்துள்­ளது.

அதன் விப­ரம்: பல முனை வரி­களை நீக்கி, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு முறையை அமல்­ப­டுத்­தி­ய­தன் மூலம், உள்­நாட்டு வணி­கத்­தில் உள்ள பல்­வேறு தடை­கள் அகற்­றப்­பட்டு உள்ளன. இத­னால், நாட்­டின் உற்­பத்தி அதி­க­ரிக்­கும். நீண்ட கால அடிப்­ப­டை­யில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி சிறப்­பாக இருக்­கும். ஆனால், குறிப்­பிட்ட காலம் வரை, வரி வரு­வாய் உயர வாய்ப்­பில்லை.

எனி­னும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி உய­ர­வும், வரி செலுத்­தும் வரம்­பிற்­குள் அதி­க­மா­னோரை கொண்டு வர­வும், ஜி.எஸ்.டி., உத­வும் என்­ப­தால், நீண்ட கால அடிப்­ப­டை­யில், அர­சின் மறை­முக வரு­வாய் உய­ரும். தேசிய அள­வில் ஒரே சந்தை உரு­வாகி உள்­ள­தால், தொழில் செய்­வது சுல­ப­மா­கும். இது, அன்­னிய முத­லீ­டு­களை அதி­க­ள­வில் ஈர்க்க வழி­வ­குக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.

ஆர்­வம்:
கடந்த வாரம், தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ வெளி­யிட்ட அறிக்­கை­யில், ‘இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, ஜி.எஸ்.டி., துணை புரி­யும் என்­ப­தால், நாட்­டின் கடன் தகுதி மதிப்­பீடு, சாத­க­மான நிலைக்கு உய­ரும்’ என, தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால், இந்த அம்­சம் குறித்து, ‘பிட்ச்’ நிறு­வ­னம் எது­வும் தெரி­விக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜி.எஸ்.டி.,யில், பொருட்­களை உற்­பத்தி செய்­வோர் முதல், சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள் வரை, சங்­கி­லித் தொடர் போன்ற வரி விதிப்­பின் கீழ் வரு­கின்­ற­னர். அவர்­கள், முறை­யாக, ஜி.எஸ்.டி., செலுத்­திய ஆவ­ணங்­களை காட்டி, வரியை திரும்­பப் பெற்­றுக் கொள்­ள­லாம். இத­னால், பெரிய நிறு­வ­னங்­கள், பல்­வேறு பொருட்­களை சப்ளை செய்­யும் சிறிய நிறு­வ­னங்­களை, ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­யு­மாறு வற்­பு­றுத்­து­கின்றன. அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து மட்­டுமே, பொருட்­களை கொள்­மு­தல் செய்­யத் துவங்கி உள்ளன.

இத­னால், சிறிய நிறு­வ­னங்­களும், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்ய ஆர்­வம் காட்டி வரு­கின்றன. மின்­னணு முறை­யில், ஜி.எஸ்.டி., கணக்கை சுல­ப­மாக தாக்­கல் செய்­ய­லாம் என்­பது, இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு கூடு­தல் அனு­கூ­ல­மாக இருக்­கும்.

வரி ஏய்ப்பு நடக்­காது:
சில்­லரை விற்­ப­னை­யில், அமைப்பு சாரா பிரி­வி­ன­ரின் பங்கு, 90 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளது. அத்­த­கை­யோ­ரின் விற்­பனை சார்ந்த பரி­வர்த்­த­னை­கள் முழு­வ­தும், ஜி.எஸ்.டி.,யின் சங்­கிலி தொடர் வரி விதிப்பு முறை கார­ண­மாக, அனைத்து கட்­டங்­க­ளி­லும் கண்­கா­ணிப்­பிற்கு உள்­ளா­கும். அத­னால், சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள், இனி தங்­கள் விற்­ப­னையை குறைத்­துக் காட்­டு­வதோ அல்­லது வரி கணக்கை தாக்­கல் செய்­யா­மல், வரி ஏய்ப்பு செய்­யவோ முடி­யாது. இது, மிகப்­பெ­ரிய அள­விற்கு, அமைப்பு சாரா பிரி­வி­னரை, அமைப்பு சார்ந்த துறைக்கு மாற்ற உத­வும் என, ‘மூடிஸ்’ அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)