இந்தியா – இஸ்ரேல் ‘ஸ்டார்ட் அப்’ துறை 2,500 கோடி டாலர்  வருவாய்க்கு வாய்ப்புஇந்தியா – இஸ்ரேல் ‘ஸ்டார்ட் அப்’ துறை 2,500 கோடி டாலர் வருவாய்க்கு வாய்ப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.73 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.73 ...
முதலீட்டாளர்களின் பார்வை திரும்புகிறது - ‘ஐமியா’ நாடுகளில் பெருகும் புதிய பங்கு வெளியீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2017
22:39

புது­டில்லி : ‘முத­லீட்­டா­ளர்­களின் பார்வை, ‘ஐமியா’ நாடு­கள் பக்­கம் திரும்பி உள்­ள­தால், வரும் மாதங்­களில், அந்­நா­டு­களில் அதி­க­ள­வில் புதிய பங்கு வெளி­யீ­டு­கள் இருக்­கும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.சர்­வ­தேச நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ‘எர்­னஸ்ட் அண்டு யங்’ புதிய பங்கு வெளி­யீ­டு­கள் குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:இந்­தாண்டு ஜூன் வரை­யி­லான ஆறு மாதங்­களில், ‘ஐமியா’ எனப்­படும், ஐரோப்பா, மத்­திய கிழக்கு, இந்­தியா மற்­றும் ஆப்­ரிக்க நாடு­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் சூடு­பி­டித்­துள்ளன.உலக நாடு­கள் சில­வற்­றில், ஸ்தி­ர­மற்ற அர­சி­யல் சூழல் காணப்­பட்ட போதி­லும், ‘ஐமியா’ நாடு­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்­றன. இதன் கார­ண­மாக, சர்­வ­தேச அள­வில், சுறு­சு­றுப்­பான புதிய பங்கு வெளி­யீ­டு­கள் நடை­பெற்ற நாடு­களில், இரண்­டா­வது இடத்தை, ‘ஐமியா’ பிடித்­துள்­ளது.பிரிட்­டன், பிரான்ஸ் உள்­ளிட்ட சில ஐரோப்­பிய நாடு­களில், தேர்­தல் அறி­விப்பு வெளி­யா­ன­வு­டன், அங்கு நிலவி வந்த அர­சி­யல் ஸ்தி­ர­மற்ற நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, அந்­நா­டு­களில், முத­லீட்­டா­ளர்­கள், நம்­பிக்­கை­யு­டன் பங்­கு­களில் முத­லீடு செய்­யத் துவங்கி உள்­ள­னர்.அது போல, ‘ஐமியா’ நாடு­க­ளி­லும் புதிய பங்கு வெளி­யீ­டு­கள் வர­வேற்பை பெற்­றுள்ளன. இதில், இந்­தியா முத­லி­டத்­தி­லும், நார்வே, டென்­மார்க் உள்­ளிட்ட நாடு­கள் அடுத்த இடங்­க­ளி­லும் உள்ளன.சர்­வ­தேச அள­வில், இந்­தாண்டு துவங்கி இது­வரை, 772 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 8,340 கோடி டாலர் திரட்­டப்­பட்டு உள்­ளது. இதில், ஏப்., – ஜூன் வரை­யி­லான காலத்­தில், மூன்று துறை­களில், அதி­க­ள­வில் புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.அவற்­றில், அதி­க­பட்­ச­மாக, தொழிற்­நுட்­பத் துறை­யைச் சேர்ந்த, 13 நிறு­வ­னங்­கள், பங்­கு­களை வெளி­யிட்டு, 150 கோடி டாலர் திரட்­டிக் கொண்­டன. அடுத்து, தொழில் துறை­யில், 12 நிறு­வ­னங்­கள், 320 கோடி டாலர் திரட்­டின. ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யைச் சேர்ந்த, 11 நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் வாயி­லாக, 230 கோடி டாலர் திரட்டி உள்ளன.ஆறு மாதங்­களில், இந்­தி­யா­வின், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­கள்; சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பங்­குச் சந்­தை­கள் ஆகி­ய­வற்­றில், 57 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 230 கோடி டாலர் திரட்­டப்­பட்டு உள்­ளது.மத்­திய அர­சின் கொள்­கை­கள், நிர்­வாக சீர்­தி­ருத்­தம் போன்­றவை கார­ண­மாக, பங்­குச் சந்­தை­களில், முத­லீட்­டா­ளர்­கள் ஆர்­வத்­து­டன் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். அத­னால், நிறு­வ­னங்­களும் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொள்­வ­தில் தீவி­ர­மாக உள்ளன. இது, இரண்­டா­வது அரை­யாண்­டில் மேலும் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)