பதிவு செய்த நாள்
08 ஜூலை2017
02:43
நியூயார்க்:மைக்ரோசாப்ட் நிறுவனம், நிர்வாக மாற்றங்களை முன்னிட்டு, 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது.இது குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:எங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கு, மிகச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், நிர்வாகத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அதன்படி, ஒருசில பதவிகளையும், ஊழியர்களையும் நீக்க முடிவு செய்துள்ளோம். இது, அனைத்து நிறுவனங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறை தான்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிறுவனம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில், உலகளவில், 50 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இத்துறையில் இருந்து, 4,000 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், பெரும்பாலானோர், அமெரிக்காவிற்கு வெளியில் பணியாற்றுவோராக இருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|