பதிவு செய்த நாள்
14 ஜூலை2017
10:00
மும்பை : தொடர்ந்து 5 வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வை சந்தித்து வருகின்றன. நேற்று வர்த்தக துவங்கிய சிறிது நேரத்திலேயே முதல் முறையாக 32,000 புள்ளிகளை எட்டிப்பிடித்து, சென்செக்ஸ் புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 14) பங்குச்சந்தைகள் வரலாற்றில் முதல் முறையாக 9900 புள்ளிகளை கடந்து நிப்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இன்றைய வர்த்தக வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 72.24 புள்ளிகள் .யர்ந்து 32,109.62 புள்ளிகளாகவம், நிப்டி 12.70 புள்ளிகள் உயர்ந்து 9904.40 புள்ளிகளாகவம் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய ஐடி துறை நிறுவனமான இன்போசிஸ், தனது முதல் காலாண்டு நிகர லாபத்தை இன்று வெளியிட்டுள்ளதே நிப்டியின் இந்த புதிய உச்சத்திற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|