பதிவு செய்த நாள்
14 ஜூலை2017
16:07
மும்பை : நேற்று சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை கடந்தும், இன்று நிப்டி 9900 புள்ளிகளை கடந்தும் பங்குச்சந்தை வரலாற்றில் புதிய சாதனை படைத்தன. தொடர்ந்து 5வது நாளாக ஏற்றமடைந்த பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின.
ஐடிசி, டிசிஎஸ், ஹச்டிஎப்சி, ஹச்டிஎப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு துணை நின்ற போதிலும், கோடாக் மகேந்திரா வங்கி, இன்போசிஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பெரு நிறுவன பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்ததை, பங்குச்சந்தைகளின் சரிவு ஏற்பட்டது. ஐடி, உலோகம், ஆட்டோ துறை பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தன.
இதன் காரணமாக இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 16.63 புள்ளிகள் சரிந்து 32,020.75 புள்ளிகளாகவும், நிப்டி 5.35 புள்ளிகள் சரிந்து 9886.35 புள்ளிகளாகவும் இருந்தன. சென்செக்ஸ் தொடர்ந்து 32,000 புள்ளிகளுக்கு மேல் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதிலும், நிப்டி 9900 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|