பதிவு செய்த நாள்
15 ஜூலை2017
00:46
சார், நாங்கள், இரு மாநிலங்களில் விற்பனை மையம் வைத்துள்ளோம். இரு இடங்களிலும், ஜி.எஸ்.டி., பதிவு பெற்றுவிட்டோம். நாங்கள், தற்போது இரு மாநிலங்களுக்கும் சேர்த்து, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், ‘அக்கவுன்ட்ஸ்’ புத்தகங்கள் வைத்துள்ளோம். இது சரியா அல்லது தனித்தனியே அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் வைத்துக் கொள்ள வேண்டுமா?–ராகவன், விழுப்புரம்பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் உரிய அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள், தனித்தனியே அந்தந்த இடத்தில் பராமரிக்க வேண்டும்.
சார், நான் நகைக் கடை வைத்துள்ளேன். வாடிக்கையாளர்களிடமிருந்து பழைய நகைகளை பெற்று, அதற்கு நிகராக ரொக்கமோ புதிய நகையோ வழங்கினால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், வரி செலுத்த வேண்டாம் என, தாங்கள், ‘தினமலர்’ நாளிதழில், ‘ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்’ பகுதியில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், வேறு சிலர் அத்தகைய பரிவர்த்தனைக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு வருமென்று கூறுகின்றனர். இது, குழப்பமாக உள்ளது. தயவுகூர்ந்து விளக்கவும்.– வாசுதேவன், ஈரோடுஜி.எஸ்.டி., சட்ட விதியில், எந்த மாற்றமும் இல்லை. இத்தகைய பரிவர்த்தனை, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி வரம்பிற்குள் வராது. ஏனெனில், வாடிக்கையாளர்களை வியாபாரம் செய்யும் நபராக கருத முடியாது. இதுவே, நகை வியாபாரம் செய்யும் பதிவு பெறாத ஒரு நபர், வேறொரு பதிவு பெற்ற நகை வியாபாரியிடம் நகைகளை விற்றால், அத்தகைய பரிவர்த்தனைக்கு தான், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை வரும்.
நான், முத்திரை தாள் விற்பனையாளராக உள்ளேன். ஆண்டிற்கு, 18 லட்சம் ரூபாய் – 25 லட்சம் ரூபாய் வரை, முத்திரை தாள் விற்பனை செய்கிறேன். இதற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 360 ரூபாய் சேவை கட்டணமாக, அரசு எனக்கு வழங்குகிறது. ஜி.எஸ்.டி., பதிவிற்கு ஆண்டு கொள்முதலை கணக்கில் கொள்ள வேண்டுமா அல்லது ஆண்டின் மொத்த சேவை கட்டணத்தை கணக்கிட வேண்டுமா என்பதை அறிய விரும்புகிறேன். மேலும், ஜி.எஸ்.டி., விண்ணப்பிக்க வேண்டுமா; வேண்டாமா என்பதையும் அறிய விரும்புகிறேன்.– பத்மினி, திருவள்ளூர்உங்கள் சேவை கட்டணத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். உங்களின் சேவை வருமானம் ஆண்டிற்கு, 20 லட்சம் ரூபாயை தாண்டும் போது, ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொண்டால் போதுமானது.
நாங்கள், பல்பொருள் அங்காடி வைத்துள்ளோம். எங்களிடம், நாளொன்றுக்கு சராசரியாக, 200 – 300 வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். நாங்கள், ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் படிவம் தாக்கல் செய்யும் போது, விலைப் பட்டியல் வாரியான விபரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டுமா? இது, எங்களுக்கு கடினமாக இருக்கும்.– ராஜ்குமார், கம்பம்நீங்கள், ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் படிவத்தை தாக்கல் செய்யும் போது, நுகர்வோருக்கு செய்த விற்பனையை, விலைப் பட்டியல் வாரியாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நாளில், நுகர்வோருக்கு செய்த விற்பனையை, மொத்தமாக குறிப்பிட்டால் போதுமானது.
ஜி.எஸ்.டி அமைப்பில் ஏற்றுமதிக்கான, ‘ரீபண்டு’ எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?– தியாகராஜன், சூலுார்மத்திய அரசு தந்த உறுதியின்படி, பணத்தை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பித்த, ஏழு நாட்களுக்குள், 90 சதவீதம் அளிக்கப்படும். மீதம், 10 சதவீதம் விண்ணப்பத்தை பரிசீலித்து வழங்கப்படும்.
நாங்கள், ‘வாட்’ பதிவு பெறவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., பதிவிற்கு விண்ணப்பித்துவிட்டோம். எங்களிடம், 2017 ஜூன், 30ல் உள்ள கையிருப்பு சரக்கிற்கு, 60 சதவீதம் வரை, உள்ளீட்டு பயன் எடுத்துக் கொள்ளலாம் என, கரூரில், ‘தினமலர்’ நடத்திய, ஜி.எஸ்.டி., கருத்தரங்கில் நீங்கள் கூறினீர்கள். அந்த கையிருப்பு சரக்கை, நாங்கள், ஜூலை மாதத்திலேயே விற்றுவிட வேண்டுமா அல்லது ஏதேனும் சலுகை உள்ளதா?– அன்புச்செல்வி, கரூர்நீங்கள், ஆறு மாதங்களுக்குள், 2017 ஜூன், 30ல் உள்ள கையிருப்பு சரக்கை விற்பனை செய்ய வேண்டும். மாதாமாதம் விற்பனைக்கு ஏற்றார்போல், செலுத்திய வரியில், 60 சதவீதம் உள்ளீட்டு பயன் பெறலாம்.
நான், திருமண மண்டபம் நடத்தி வருகிறேன். இதற்கு எத்தனை சதவீதம் வரி விதிக்க வேண்டும்?– அமிர்தராஜ், வேலுார்நீங்கள், 18 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்.
நான், முந்திரி பருப்புகளை விளைவித்து, மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறேன். என் ஆண்டு மொத்த விற்பனை, 25 லட்சம் ரூபாய் – 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும். முந்திரி பருப்பிற்கு, ஜி.எஸ்.டி., உண்டா? நான் பதிவு பெற வேண்டுமா?– குமரகுரு, பண்ருட்டிமுந்திரி பருப்பிற்கு, 5 சதவீதம், ஜி.எஸ்.டி., உண்டு. உற்பத்தியாளராகிய நீங்கள் வரி வசூல் செய்ய தேவையில்லை. உங்களிடமிருந்து கொள்முதல் செய்யும், ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நபர், அதற்கான வரியை, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், அரசுக்கு செலுத்தி உள்ளீட்டு வரி பயனை பெறலாம்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|