ஊட்டச்சத்து மருந்துகள் சந்தை 1,000 கோடி டாலராக உயரும்ஊட்டச்சத்து மருந்துகள் சந்தை 1,000 கோடி டாலராக உயரும் ... மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை : சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை : சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு ...
குறு, சிறு நிறுவனங்கள் சரக்கு – சேவை வரியால் பயன் பெறலாம்: மத்திய அரசு வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2017
00:52

புதுடில்லி : ‘‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், சரக்கு மற்­றும் சேவை வரிக்கு அஞ்­சா­மல், முறை­யாக பதிவு செய்து கொண்டு பயன்­களை பெற வேண்­டும்,’’ என, மத்­திய குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர் கல்­ராஜ் மிஸ்ரா வலி­யு­றுத்தி உள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், தீர்வு அளிப்­ப­தற்­கான பிரி­வு­கள், நாடு முழு­வ­தும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன. அவற்றை, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். புதிய வரி விதிப்பை கண்டு, யாரும் அஞ்ச வேண்­டி­ய­தில்லை. அனைத்து நிறு­வ­னங்­களும், ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில் பதிவு செய்து கொண்டு, சரக்கு மற்­றும் சேவை வரி பயன்­களை பெற வேண்­டும். இந்த புதிய வரி விதிப்பை, நிறு­வ­னங்­கள் சங்­க­ட­மாக கரு­தா­மல், வர்த்­தக வளர்ச்­சிக்கு கிடைத்­துள்ள வாய்ப்­பாக எண்ண வேண்­டும்.

இந்த புதிய வரி நடை­முறை, நிறு­வ­னங்­க­ளின் வரிச்­சு­மையை குறைப்­ப­து­டன், வரித்­துறை அதி­கா­ரி­க­ளின் தேவை­யற்ற கெடு­பி­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும். சுதந்­திர இந்­தி­யா­வின் வர­லாற்­றில், இது மிக முக்­கி­ய­மான, மிகப்­பெ­ரிய வரி சீர்­தி­ருத்­தம் ஆகும். இந்த வரி விதிப்பு குறித்து, அனைத்து தரப்­பி­ன­ரும் அறிந்து பயன்­பெ­றும் வகை­யில், நாடு முழு­வ­தும், ஜி.எஸ்.டி., பயிற்சி பட்­ட­றை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அவற்றை, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். இது­வரை, 12 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மான தொழில் முனை­வோர்­க­ளுக்கு, அமைச்­ச­கத்­தின் கள அலு­வ­ல­கங்­கள், பயிற்சி மையங்­களில், ஜி.எஸ்.டி., குறித்து முழு­மை­யான பயிற்சி வழங்­கப்­பட்டு உள்­ளது.

சமூக வலை­த­ளங்­கள், ஊட­கங்­கள் ஆகி­ய­வற்­றின் மூலம், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, வரி விதிப்பு தொடர்­பான சந்­தே­கங்­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும் நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்டு உள்­ளன.குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், தயா­ரிப்பு மற்­றும் வர்த்­த­கச் செயல்­பா­டு­களில், மேகக் கணினி வசதி, தக­வல் மற்­றும் தொடர்பு தொழிற்­நுட்­பம் போன்ற நவீன வச­தி­களை புகுத்த வேண்­டும். இதை­யொட்டி, ‘டிஜிட்­டல் எம்.எஸ்.எம்.இ., திட்­டம்’ அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. குறு, சிறு, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­கள், நவீன தொழிற்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி வளர்ச்சி காண, இத்­திட்­டம் துணை புரி­யும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

வேகம் வேண்­டும்:
காதி துறை­யைச் சார்ந்த நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி., தொடர்­பான கோரிக்­கை­களை, அமைச்­ச­கத்­தி­டம்அளித்­துள்­ளன. அவற்­றுக்கு, ஜி.எஸ்.டி., கவுன்­சில் மூலம் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் கடன் சார்ந்த பிரச்­னை­களை தீர்ப்­ப­தில் வேகம் காட்­டு­மாறு, அனைத்து வங்­கி­க­ளை­யும், அமைச்­ச­கம் அறி­வு­றுத்தி உள்­ளது.– கல்ராஜ் மிஸ்ரா மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)