மூக்கு கண்ணாடி கடைகளுக்கு கடிவாளம் போட அரசு முடிவுமூக்கு கண்ணாடி கடைகளுக்கு கடிவாளம் போட அரசு முடிவு ... பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது ...
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி அமைப்பு உருவாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2017
04:45

புதுடில்லி : ‘ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­கள், இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தற்­கும், தொழில் துவங்­கு­வ­தற்­கும் உரிய ஆலோ­ச­னை­களை வழங்க, ‘ஐ.எப்.எம்.,’ என்ற தனி அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­படும்’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.இது குறித்து அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:ஐரோப்­பிய நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தற்­கும், தொழில் துவங்­கு­வ­தற்­கும் தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்க, ஐ.எப்.எம்., என்ற தனி அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இந்­தியா – ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­கள் இணைந்து உரு­வாக்க உள்ள இந்த அமைப்பு, ‘இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம்’ திட்­டத்­தின் கீழ், ஐரோப்­பிய நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் முத­லீ­டு­க­ளுக்கு, உரிய வழி­காட்­டு­தலை வழங்­கும்.ஐரோப்­பிய நிறு­வ­னங்­கள், ஒற்­றைச் சாளர முறை­யில், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்கு உரி­மம் பெற உத­வும். அத்­து­டன், ஏற்­க­னவே, இந்­தி­யா­வில் செயல்­பட்டு வரும் ஐரோப்­பிய நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்­கும், எதிர்­கொள்­ளும் பிரச்­னை­க­ளுக்­கும் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ளும்.இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தி­லும், தொழில் துவங்­கு­வ­தி­லும் ஐரோப்­பிய நிறு­வ­னங்­கள் இடர்­பா­டு­களை சந்­திக்­கின்­ற­னவா என்­பது குறித்து, அவ்­வப்­போது ஆய்வு செய்­யப்­படும்.இதற்­காக, இந்­தி­யா­வுக்­கான ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தி­க­ளு­டன், தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை உயர் அதி­கா­ரி­கள், அவ்­வப்­போது ஆலோ­சனை நடத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.இந்த ஆலோ­சனை கூட்­டத்­தில், ஐரோப்­பிய நிறு­வ­னங்­கள் சந்­திக்­கும் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.இந்­தி­யா­வுக்­கான ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பின் துாதர் டோமஸ் கோஸ்­லோவ்ஸ்கி கூறு­கை­யில், ‘‘இந்­தியா – ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு இடையே வர்த்­த­கம் மற்­றும் முத­லீ­டு­களை மேலும் வலுப்­ப­டுத்த, ஐ.எப்.எம்., உத­வும்,’’ என்­றார்.தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை செய­லர் ரமேஷ் அபி­ஷேக் கூறி­ய­தா­வது:‘இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம்’ திட்­டம், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான வச­தி­களை செய்து தரு­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்­கிறது. அதன் அடிப்­ப­டை­யில் உரு­வா­கும், ஐ.எப்.எம்., அமைப்பு, இந்­தி­யா­வில் ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பின் முத­லீ­டு­க­ளை­யும், தொழில் நிறு­வ­னங்­க­ளை­யும் ஈர்க்க துணை புரி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

வேலைவாய்ப்புஇந்­தி­யா­வில் மேற்­கொள்­ளப்­படும் அன்­னிய முத­லீ­டு­களில், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­கள் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்றன. இந்­தாண்டு மார்ச் இறுதி நில­வ­ரப்­படி, ஐரோப்­பிய நாடு­கள், இந்­தி­யா­வில், 4.40 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்ளன. உள்­நாட்­டில், ஆறா­யி­ரத்­திற்­கும் அதி­க­மான ஐரோப்­பிய நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­கின்றன. அவற்­றில், 60 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர் பணி­பு­ரி­கின்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)