பதிவு செய்த நாள்
17 ஜூலை2017
00:18
இந்திய பங்கு சந்தைகள் தற்போது வரலாற்று உச்சத்தில் வியாபாரமாகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைகளின் குறியீடுகளான நிப்டி, 9900 புள்ளிகளையும், சென்செக்ஸ், 32000 புள்ளிகளையும் கடந்தது.
உலக சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றமும், எப்.அண்டு.ஓ., பங்குகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நடத்திய, ஷார்ட் கவரிங், மேலும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை சந்தையில் பங்குகளுக்கு சாதகமான போக்கினை உருவாக்கியது.
நாட்டின் பணவீக்க விகிதம், கடந்த ஐந்து ஆண்டுகளை விட, தற்போது குறைவாகும். ஜூன் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 1.5 விழுக்காடும் மொத்த விலை பணவீக்கம் 1 விழுக்காடும் குறைந்தது. கடந்த வாரத்தில், வங்கி மற்றும் நிதி நிறுவன பங்குகள் உயர்ந்தது. வரும் நாட்களிலும் இது தொடரும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவற்றின் காலாண்டு அறிக்கைகளை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் குறிப்பிடத்தக்க மாற்றமின்மையால், பங்குகள் போக்கு சீராக இருக்கும். மருந்து துறை சார்ந்த பங்குகள் விலை, உயர வாய்ப்புள்ளது. இது முன்னணி பங்குகளுக்கு மட்டுமே அமையும்.
இந்த வாரம் வெளிவர இருக்கும் பல நிறுவனங்களின் 2017 – 2018ம் நிதியாண்டின், முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் சந்தையின் போக்கு பெரும்பாலும் அமையும். இதில் முக்கியமானவை வங்கி மற்றும் வாகன துறைகளாகும். பொது துறை வங்கிகளை விட தனியார் துறை வங்கிகளின் நிதி அறிக்கை மேம்பட்டு காணப்படும். பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, வாரா கடன் மீதான ஒதுக்கீடுகள் காரணமாக, அவற்றின் வளர்ச்சியில் முடக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று புதிய ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகளின் தாக்கம் வரும் வெள்ளியன்று சந்தையில் எதிரொலிக்கும். ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், பேங்க் ஆப் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளின் வட்டிவிகிதம் குறித்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏற்படும் மாற்றம், சந்தையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் நாட்களில், தேசிய பங்கு சந்தையின் குறியீடான நிப்டியின் அடுத்த இலக்காக, 10,045 மற்றும் 10,260 இருக்கும். சப்போர்ட் 9,675 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்
கேபிட்டல் பர்ஸ்ட், ஆர்.பி.எல்., பேங்க், பிரிகால், சுப்ரீம் இன்ப்ரா, பேங்க் ஆப் பரோடா
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|