பதிவு செய்த நாள்
19 ஜூலை2017
06:18
புதுடில்லி : ‘‘இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கு வருந்துகிறேன்,’’ என, அந்நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
அவர், ஆறு நண்பர்களுடன் இணைந்து, 1981ல், இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக, 21 ஆண்டுகள் பணியாற்றினார். பின், அப்பதவியில், மற்றொரு நிறுவனரான நந்தன் நிலேகேனியை அமர்த்திவிட்டு, 2002ல், இன்போசிஸ் தலைவர் பொறுப்பேற்று, 2011ல் ஓய்வு பெற்றார். அதன்பின், இன்போசிஸ் சற்று தடுமாறியது. இதையடுத்து, நாராயணமூர்த்தி, 2013 ஜூன், 1ல், இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் மற்றும் கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்றார். ஓராண்டுக்கு பின், 2014 ஜூன், 12ல், அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்த முடிவு குறித்து, அவர் தற்போது கூறுகையில், ‘‘என் நண்பர்கள், இன்னும் சில ஆண்டுகள் தலைவராக நீடிக்க, என்னை வற்புறுத்தினர். அதை கேட்காமல் பதவி விலகினேன். அதற்காக இப்போது வருந்துகிறேன்,’’ என்றார்.
சமீபகாலமாக, இன்போசிஸ் இயக்குனர் குழு செயல்பாடுகளை, நாராயணமூர்த்தி வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|