சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கு 4 மையங்கள் அமைக்க அரசு முடிவுசர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கு 4 மையங்கள் அமைக்க அரசு முடிவு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.35 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.35 ...
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வுக்கு அதிகம் செலவிட வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2017
06:21

புது­டில்லி : ‘இந்­திய மருந்து நிறு­வ­னங்­கள், சர்­வ­தேச போட்­டியை சமா­ளிக்க, ஆய்வு மற்­றும் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்கு, அதி­க­ள­வில் முத­லீடு செய்ய வேண்­டும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘எஸ் அண்டு பி குளோ­பல் ரேட்­டிங்ஸ்’ ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: அடுத்த இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­கள் வரை, இந்­திய மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு சிரம தசை தான். அதே சம­யம், எந்த நிறு­வ­னம் வள­ரும் போதே, சர்­வ­தேச தரத்­தில் மருந்­து­களை தயா­ரிக்க, தொடர்ந்து ஆய்வு மற்­றும் மேம்­பாட்டு திட்­டங்­களில் முத­லீடு செய்து வரு­கி­றதோ, அந்­நி­று­வ­னம் செழிக்­கும். இது போன்ற நிறு­வ­னங்­கள் குறித்து, அமெ­ரிக்க உணவு மற்­றும் மருந்து நிர்­வா­கம், ஆய்வு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட வாய்ப்­பில்லை. அத­னால், அவை, தரக் கட்­டுப்­பாடு விதி­மு­றை­களை சரி­யான முறை­யில் பின்­பற்றி, வர்த்­த­கத்தை வலுப்­ப­டுத்­திக் கொள்­ளும்.

இந்­திய மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு, மிக முக்­கிய சந்­தை­யாக உள்ள அமெ­ரிக்­கா­வில், தற்­போது, மருந்து வினி­யோக துறை­யில், ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­கள் சூடு­பி­டித்து உள்ளன. மேலும், மூலக்­கூறு மருந்து தயா­ரிப்பு துறை­யில் போட்டி அதி­க­ரித்­துள்­ளது. அதற்­கேற்ப, மருந்து விலையை நிர்­ண­யிக்­கும் நிர்ப்­பந்­தத்­தில், இந்­திய நிறு­வ­னங்­கள் உள்­ள­தால், அவற்­றின் லாப வரம்­பும், வர்த்­தக செயல்­பா­டு­களும் பாதிக்­கும். இதை தவிர்க்க, இந்­திய நிறு­வ­னங்­கள், கலவை மருந்­து­கள், தனிச் சிறப்பு மருந்­து­கள் ஆகி­ய­வற்­றின் தயா­ரிப்­பில் கவ­னம் செலுத்­தக் கூடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத்­த­கைய பிரி­வில், புதிய மருந்­து­க­ளுக்கு சிறப்­பான வர­வேற்பு உள்­ளது. போட்­டி­யும் அதி­கம் இல்லை என்­ப­தால், நிறு­வ­னங்­கள் சுதந்­தி­ர­மாக விலையை நிர்­ண­யிக்க முடி­யும். இத்­த­கைய மருந்­து­களின் ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டிற்கு, குறிப்­பி­டத்­தக்க நிதியை ஒதுக்­கு­வ­தன் மூலம், இந்­திய மருந்து நிறு­வ­னங்­கள், வரும் காலத்­தில் சிறப்­பான வளர்ச்சி காண வாய்ப்பு உள்­ளது.

அமெ­ரிக்­கா­வில், வர்த்­தக பற்­றாக்­கு­றையை குறைக்க, வரி விதிப்­பு­களில் மாற்­றம் செய்­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது. மேலும், உள்­நாட்டு தயா­ரிப்­பு­களை ஊக்­கு­விக்­க­வும், கொள்கை அள­வில் முடிவு எடுக்­கப்­பட்டு உள்­ளது. இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள், இந்­திய மருந்து நிறு­வ­னங்­களின் லாப வரம்பை பாதிக்­கும். எனி­னும், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு செலவை குறைக்­கும், டிரம்ப் அர­சின் முடிவு, மூலக்­கூறு மருந்­து­க­ளுக்­கான தேவையை அதி­க­ரிக்­கச் செய்­யும். இத­னால், இவ்­வகை மருந்­து­களின் ஏற்­று­ம­தி­யில் ஈடு­பட்­டுள்ள இந்­திய மருந்து நிறு­வ­னங்­கள் பய­ன­டை­யும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

ஏற்றுமதி:
கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மருந்து ஏற்­று­மதி, 1,640 கோடி டால­ராக உள்ளது. இதில், அமெ­ரிக்­கா­வின் பங்கு, 40.6 சத­வீ­தம்; ஐரோப்பா, 19.7 சத­வீ­தம்; ஆப்­ரிக்கா, 19.1 சத­வீ­தம்; ஆசியா, 18.8 சத­வீ­தம் ஆக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)