பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
00:10
புதுடில்லி : சென்னையைச் சேர்ந்த மேட்ரிமோனி டாட் காம் நிறுவனம், வலைதளம் மூலம் திருமணத்திற்கான வரன் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், சென்னையில் அலுவலகம் அமைப்பதற்கு நிலம் வாங்கவும், பங்கு வெளியீட்டின் மூலம், 350 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு, ‘செபி’ அனுமதி வழங்கியுள்ளது. ஆமதாபாத்தைச் சேர்ந்த ஷால்பி ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம், தற்போது கட்டப்பட்டு வரும் மருத்துவமனை திட்டங்களுக்கும், மருத்துவ சாதனங்களை வாங்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 580 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கும், ‘செபி’ அனுமதி வழங்கியுள்ளது. விரைவில், இந்த இரு நிறுவனங்களும் பங்கு வெளியீடு குறித்து அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஷால்பி ஹாஸ்பிடல்ஸ், 2015ல், பங்கு வெளியீட்டில் களமிறங்க, விண்ணப்பித்து, பின் அத்திட்டத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|