பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
00:11
காந்திநகர் : சமூக வலைதள நிறுவனமான, ‘பேஸ்புக்’ அடுத்த ஆறு மாதங்களில், 100 நகரங்களில், 20 ஆயிரம் தொழில்முனைவோரை இணைக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், ‘உங்கள் வர்த்தகத்தை உயர்த்துங்கள்’ என்ற திட்டத்தின் கீழ், தொழில்முனைவோரின் தயாரிப்புகளை பரவலாக சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்க, குஜராத்தைச் சேர்ந்த, தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்துடன், பேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, பேஸ்புக் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் திட்ட மேலாளர் ரிதேஷ் மேத்தா கூறியதாவது: தொழில்முனைவோரின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக, 2015ல், ‘உங்கள் வர்த்தகத்தை உயர்த்துங்கள்’ திட்டம் துவக்கப்பட்டது. சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு தொழிற்நுட்பம், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து, அவற்றின் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல இத்திட்டம் உதவி புரிந்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில், 20 ஆயிரம் தொழில்முனைவோரை நிறுவனத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|