அதிக முதலீட்டு வாய்ப்பில் குஜராத் முதலிடம்அதிக முதலீட்டு வாய்ப்பில் குஜராத் முதலிடம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.35 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.35 ...
பங்கு சந்தையில் எழுச்சி; நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2017
00:14

மும்பை : சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள், அதி­க­ள­வில் நிறு­வ­னங்­களின் பங்­கு­களில் ஆர்­வ­மு­டன் முத­லீடு செய்து வரு­வது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

கடந்த ஏப்­ர­லில், முதன்­மு­றை­யாக மும்பை பங்­குச் சந்­தை­யின் குறி­யீட்டு எண், ‘சென்­செக்ஸ்’ 30 ஆயி­ரம் புள்­ளி­களை கடந்­தது. இதை தொடர்ந்து, ஜியோ­ஜித் பைனான்­ஷி­யல் சர்­வீ­சஸ் நிறு­வ­னம், சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள், 3 லட்­சம் பேரி­டம் ஆய்வு மேற்­கொண்டு, அறிக்கை வெளி­யிட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ பங்கு முத­லீடு குறித்து, 1,000க்கும் அதி­க­மான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை நடத்­தி­ய­தற்­கான பயன், தற்­போது கிடைக்க துவங்கி உள்­ளது. ஏரா­ள­மா­னோர் ஆர்­வத்து­டன், பங்­குச் சந்­தை­யில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர் இதற்கு, சமீ­ப­கா­ல­மாக, இந்­திய பங்­குச் சந்­தை­களின் எழுச்­சி­யும் முக்­கிய கார­ண­மா­கும்.

ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில், 83.5 சத­வீ­தம் பேர், நேர­டி­யாக பங்­கு­களில் முத­லீடு செய்­வ­தாக தெரி­வித்து உள்­ள­னர். உப­ரி­யாக பணம் உள்ள போது தான், பங்­கு­களில் முத­லீடு செய்­வ­தாக, 59.25 சத­வீ­தத்­தி­னர் கூறி­யுள்­ள­னர். மாதந்­தோ­றும் பங்­கு­களில் முத­லீடு செய்­வ­தாக, 20 சத­வீ­தம் பேர் தெரி­வித்து உள்­ள­னர். பங்­கு­களை அடுத்து, மியூச்­சு­வல் பண்­டு­களில், 57.21 சத­வீ­தத்­தி­ன­ரும், ‘டெரி­வேட்­டிவ்’ பிரி­வில், 4.76 சத­வீ­தம் பேரும் முத­லீடு செய்ய விரும்­பு­வ­தாக கூறி­யுள்­ள­னர்.

அன்­றா­டம் பங்கு வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வ­தாக, 14.55 சத­வீ­தத்­தி­ன­ரும், அது அபா­ய­க­ர­மா­னது என, 62 சத­வீ­தம் பேரும் கருத்து தெரி­வித்து உள்­ள­னர்.அதிக ஆதா­யம் பெற வேண்­டு­மென்­றால், பங்­கு­களில் முத­லீடு செய்­வது தான் சரி என, 65.5 சத­வீ­தத்­தி­ன­ரும், மியூச்­சு­வல் பண்­டு­கள் தான் லாப­க­ர­மா­னவை என, 24 சத­வீ­தம் பேரும் கூறி­யுள்­ள­னர். பங்­குச் சந்தை உச்­சத்­தில் இருந்து சரி­யும் வரை காத்­தி­ருந்து முத­லீடு செய்ய விரும்­பு­வ­தாக, 65 சத­வீ­தம் பேர் தெரி­வித்து உள்­ள­னர்.

இந்த ஆய்­வில், முத­லீட்­டா­ளர்­கள் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் பங்கு முத­லீ­டு­களை தேர்வு செய்­வது தெரிய வந்­துள்­ளது. இதற்கு, கடந்த காலங்­களில், பங்­குச் சந்­தை­களின் எழுச்­சி­யை­யும், திடீர் சரி­வை­யும் சந்­தித்த அனு­ப­வம் தான் கார­ணம். சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களில், இந்­திய பங்­குச் சந்­தை­களின் வளர்ச்சி சிறப்­பாக உள்­ளது. பொது­வாக, பங்­குச் சந்தை எழுச்சி காணும் போது, ஆர்­வத்­து­டன் முத­லீடு செய்­வ­தும், வீழ்ச்சி கண்­டால், இழப்­பு­டன் வெளி­யே­று­வ­தும் தான், சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் போக்­காக உள்­ளது.

உல­க­ள­வில், பங்கு முத­லீட்­டின் மூலம், சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள் அதிக ஆதா­யம் பெற்­றது குறித்து, போதிய புள்ளி விப­ரங்­கள் இல்லை. இருந்த போதி­லும், சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் விருப்­ப­மான தேர்­வாக, பங்கு முத­லீடு உள்­ளது ஆச்­ச­ரி­யம் அளிக்­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)