பதிவு செய்த நாள்
21 ஜூலை2017
08:24
புதுடில்லி : கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நுகர்வோர் சாதனங்கள், ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான, கோத்ரெஜ் அக்ரோவெட், வேளாண் இடுபொருட்கள், கால்நடை தீவனங்கள், பாமாயில் தயாரிப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், அதன் நிர்வாக நடைமுறை செலவினங்களுக்கும், பழைய கடனை திரும்பத் தருவதற்கும், பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான ஆவணங்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அளிக்கப்பட்டு உள்ளன.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 – 1,200 கோடி ரூபாய் திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ‘செபி’யின் அனுமதி கிடைத்த பின், பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும். கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தில், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 60.81 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|