பதிவு செய்த நாள்
21 ஜூலை2017
08:25
புதுடில்லி : மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்பத் துறை இணையமைச்சர், பி.பி.சவுத்ரி, லோக்சபாவில் கூறியதாவது: இந்தாண்டு மார்ச்சில், 119.07 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது, ஏப்ரலில், 118.01 கோடி; மே மாதம், 111.45 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த, 2016 அக்டோபரில், 71.26 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. நவ., 8ல், பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, அம்மாதத்தில்,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், 83.48 கோடியாக உயர்ந்தன. இவை, டிசம்பரில், 123.46 கோடியாக மேலும் அதிகரித்துள்ளன. இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில், முறையே, 114.96 கோடி மற்றும் 101.18 கோடி அளவிற்கு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
ரிசர்வ் வங்கி, 2014 ஜூலையில், அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை, வங்கிகள் சுயமாக நிர்ணயித்துக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|