‘ஏர் – இந்தியா’ கடனுக்கு என்ன வழி? டாடா குழுமம் கேள்வி கேட்கிறது‘ஏர் – இந்தியா’ கடனுக்கு என்ன வழி? டாடா குழுமம் கேள்வி கேட்கிறது ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.35 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.35 ...
சிறிய கட்டுமான நிறுவனங்களுக்கு நெருக்கடி; குடியிருப்பு திட்டங்கள் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2017
08:31

மும்பை : ‘அம­லுக்கு வந்­துள்ள, ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்ட விதி­கள் கார­ண­மாக, சிறிய கட்­டு­மான நிறு­வ­னங்­கள் நிதி நெருக்­க­டிக்கு ஆளா­கும் என்­ப­தால், புதிய குடி­யி­ருப்பு திட்­டங்­கள் குறைய வாய்ப்பு உள்­ளது’ என, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

இது குறித்து, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கிரி­சில்’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம், மே, 1 முதல் அம­லுக்கு வந்­துள்­ளது. இது, கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்­கும், வீடு வாங்­கு­வோ­ருக்­கும் இடையே, ஒளி­வு­ம­றை­வற்ற நடை­மு­றைக்கு வழி­வ­குக்­கிறது. நீண்ட கால அடிப்­ப­டை­யில், இந்த சட்­டம், ரியல் எஸ்­டேட் துறை­யில் நம்­ப­கத்­தன்­மையை ஏற்­ப­டுத்­தும். கட்­டு­மான நிறு­வ­னங்­கள் மீது, வாடிக்­கை­யா­ளர்­களின் நம்­பிக்­கையை அதி­க­ரிக்க துணை புரி­யும். எனி­னும், குறு­கிய கால அடிப்­ப­டை­யில், புதிய சட்­டத்­தின் விதி­மு­றை­க­ளால், சிறிய கட்­டு­மான நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­கள் மந்­த­மாக வாய்ப்­புள்­ளது. இந்­நி­று­வ­னங்­களின் நடை­முறை மூல­தன தேவை­கள் அதி­க­ரிக்­கும் என்­ப­தால், நடப்பு நிதி­யாண்­டில், புதிய குடி­யி­ருப்பு திட்­டங்­களின் அறி­மு­கம் குறை­யும். இந்த சட்­டத்­தின்­படி, அனைத்து கட்­டு­மான நிறு­வ­னங்­களும், அந்­தந்த மாநி­லங்­களின் ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தில் பதிவு செய்து கொள்ள வேண்­டும்.

புதிய குடி­யி­ருப்பு திட்­டங்­களை பதிவு செய்­யும் முன், அப்­ப­ணி­களை துவக்­கி­ய­தற்­கான சான்­றி­தழை, கட்­டு­மான நிறு­வ­னங்­கள் பெற வேண்­டும். இது, குடி­யி­ருப்பு விற்­ப­னைக்­கும் பொருந்­தும். கட்­டு­மான நிறு­வ­னங்­கள், ஒப்­பந்­தப்­படி குறித்த காலத்­தில் வீடு­களை, உரி­மை­யா­ள­ரி­டம் ஒப்­ப­டைக்க தவ­றி­னால், வட்­டி­யு­டன் இழப்­பீடு வழங்க வேண்­டும் என்­பது உள்­ளிட்ட விதி­மு­றை­கள், இந்த சட்­டத்­தில் இடம் பெற்­றுள்ளன. அத­னால், இனி கட்­டு­மான நிறு­வ­னங்­கள், வாடிக்­கை­யா­ள­ரின் முன்­ப­ணத்­தில், குடி­யி­ருப்பு திட்­டங்­களை துவக்க முடி­யாத நிலை ஏற்­படும். இதன் கார­ண­மாக, சிறிய கட்­டு­மான நிறு­வ­னங்­களின் நிதிச்­சுமை அதி­க­ரிக்­கும். குறிப்­பாக, அமைப்பு சாராத கட்­டு­மான நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­படும். அவை, நாள­டை­வில், பெரிய நிறு­வ­னங்­களின் கீழ் இணை­ய­வும் வாய்ப்­புள்­ளது.

அதே சம­யம், பெரிய நிறு­வ­னங்­கள் அவற்­றின் வலி­மை­யான நிதி ஆதா­ரம், கட்­ட­மைப்பு வச­தி­கள் ஆகி­ய­வற்­றின் மூலம், விதி­மு­றைப்­படி குடி­யி­ருப்பு திட்­டங்­களை நிறை­வேற்­றும். ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டத்­தின் கீழ், இம்­மாத இறு­திக்­குள், அனைத்து மாநி­லங்­களின் ரியல் எஸ்­டேட் ஆணை­யங்­களில், கட்­டு­மான திட்­டங்­கள் பதிவு செய்­யப்­பட வேண்­டும். ஆனால், ஒரு­சில மாநி­லங்­கள் மட்­டுமே, ரியல் எஸ்­டேட் ஆணை­யத்தை அமைத்­துள்ளன. பல மாநி­லங்­கள், இன்­னும் ஆணை­யம் அமைக்­கா­மல் உள்ளன. இம்­மா­நி­லங்­களில் குடி­யி­ருப்பு திட்­டங்­களை பதிவு செய்­வ­தில் ஏற்­படும் தாம­தம், கட்­டு­மான நிறு­வ­னங்­களை பாதிக்­கும். கட்­டு­மான திட்­டங்­களை, குறித்த காலத்­தில் நிறை­வேற்­றக் கூடிய திறன் கொண்ட கட்­டு­மான நிறு­வ­னங்­களின் வர்த்­த­கத்­தில் பாதிப்பு ஏதும் இருக்­காது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)