பதிவு செய்த நாள்
21 ஜூலை2017
10:17
மும்பை : நேற்று சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பி உள்ளன. சென்செக்ஸ் மீண்டும் 32,000 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 21, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 131.48 புள்ளிகள் உயர்ந்து 32,035.88 புள்ளிகளாகவும், நிப்டி 26.65 புள்ளிகள் உயர்ந்து 9899.95 புள்ளிகளாகவும் உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் காலாண்டு நிகரலாபம் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்களிடையே அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையே பங்குச்சந்தைகள் மீண்டும் உயர்விற்கு திரும்பியதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஐடி, தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அதிக லாபம் ஈட்டி உள்ளன. இன்போசிஸ், கோல் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், எஸ்பிஐ, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஹச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|