மொபைல் போன் தயாரிப்பு  ரூ.90 ஆயிரம் கோடியை எட்டியதுமொபைல் போன் தயாரிப்பு ரூ.90 ஆயிரம் கோடியை எட்டியது ... ‘இலவச ஆர்ஜியோ போன் புத்திசாலித்தனமான வர்த்தகம்’ ‘இலவச ஆர்ஜியோ போன் புத்திசாலித்தனமான வர்த்தகம்’ ...
காமராஜர் துறைமுகம் 10 கோடி டாலர் கடன் திரட்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2017
01:45

சென்னை : சென்னை அருகே, எண்­ணுா­ரில் உள்ள காம­ரா­ஜர் துறை­மு­கம், அதன் விரி­வாக்­கத் திட்­டத்­திற்­காக, ஆக்­சிஸ் வங்­கி­யி­டம் இருந்து, 10 கோடி டாலர் கடன் திரட்டி உள்­ளது.இது குறித்து, காம­ரா­ஜர் துறை­மு­கத்­தின் தலை­வர், எம்.ஏ.பாஸ்­க­ராச்­சார் கூறி­ய­தா­வது:மத்­திய கப்­பல் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் நிதின் கட்­கரி, ‘துறை­மு­கங்­கள் வாயி­லான, அன்­னிய செலா­வணி வரு­வாயை அதி­க­ரிக்க, குறைந்த வட்­டி­யில், அன்­னிய செலா­வணி கடன் பெற வேண்­டும்’ என, தெரி­வித்து உள்­ளார்.இதை­ய­டுத்து, கட­னுக்­கான ஒப்­பந்­தப் புள்­ளி­கள் கோரப்­பட்­டன. இதில் பங்­கேற்ற வங்­கி­களில், ஆக்­சிஸ் வங்கி, மிக­வும் குறை­வாக, 3.15 சத­வீத வட்­டி­யில், ஐந்து ஆண்­டு­களில் திரும்ப அளிக்­கும் வகை­யில், 10 கோடி டாலர் கடன் வழங்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்­தது. அதை, துறை­முக நிர்­வா­கம் ஏற்­றுக் கொண்­டது.இந்த கடன் தொகை­யில், துறை­மு­கத்­தின் ஆழம், தற்­போ­தைய, 16 மீட்­ட­ரில் இருந்து, 18 மீட்­ட­ராக அதி­க­ரிக்­கப்­படும். இதன் மூலம், மிகப்­பெ­ரிய சரக்கு கப்­பல்­களை துறை­மு­கத்­தில் நிறுத்த முடி­யும். இத­னால், சரக்கு கையா­ளும் செலவு பெரு­ம­ளவு குறை­யும். இத்­து­டன், தமி­ழக மின் வாரி­யத்­திற்­காக, புதிய நிலக்­கரி இறக்­கு­மதி தளம், பொது­வான சரக்கு தளம் மற்­றும் மூன்று லட்­சம் கார்­களை கையா­ளக்­கூ­டிய, இரண்­டா­வது வாகன ஏற்­று­மதி முனை­யம் ஆகி­ய­வை­யும் அமைக்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)