பதிவு செய்த நாள்
23 ஜூலை2017
01:46
புதுடில்லி : மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா, ராஜ்யசபாவில் கூறியதாவது:மூன்று ஆண்டுகளாக, நாட்டின் பருத்தி ஜவுளி வகைகளின் ஏற்றுமதி, 10சதவீதம் சரிவடைந்துள்ளது.கடந்த, 2016 –- 17ம் நிதியாண்டில், 70 ஆயிரத்து, 936 கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, 2015 – 16 மற்றும் 2014 –- 15ம் நிதியாண்டுகளில், முறையே, 72 ஆயிரத்து, 994 கோடி ரூபாய் மற்றும் 71 ஆயிரத்து, 913 கோடி ரூபாய் ஆக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.பருத்தி ஜவுளிகள் ஏற்றுமதி பிரிவில், பருத்தி நுாலிழை, இதர ஜவுளி இழை, துணி, படுக்கை விரிப்பு, தலையணை, திரைச்சீலை, கச்சா பருத்தி கழிவு ஆகியவை அடங்கியுள்ளன.தற்போது, திறந்தவெளி உரிம திட்டத்தின் கீழ், பருத்தி ஜவுளிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜவுளிகள் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள், மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், அன்னிய வர்த்தக இயக்குனரகம் ஆகியவற்றின் கீழ் நடைபெறுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|