பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் 3 ஆண்டுகளாக பின்னடைவுபருத்தி ஜவுளி ஏற்றுமதியில் 3 ஆண்டுகளாக பின்னடைவு ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2017
01:47

மும்பை : மத்­திய அரசு, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 1,000 கோடி டாலர் முத­லீட்டை ஈர்க்க திட்­ட­மிட்டு உள்­ளது.இதை, மும்­பை­யில் நடை­பெற்ற சர்­வ­தேச உணவு மாநாட்­டில், மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் தெரி­வித்­தார்.அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்த ஆண்டு, பன்­முக பிராண்டு உண­வுப் பொருட்­களின் சில்­லரை விற்­ப­னை­யில், அன்­னிய நேரடி முத­லீடு, 100 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து, இத்­துறை, 40 சத­வீத வளர்ச்சி கண்­டுள்­ளது.அடுத்து, பண்­ணைப் பொருட்­கள் உற்­பத்தி முதல், விற்­பனை வரை­யி­லான அனைத்து கட்­ட­மைப்பு வச­தி­களும் செயல்­பாட்­டுக்கு வந்­தால், மிகப்­பெ­ரிய அள­வில், அன்­னிய முத­லீடு குவி­யும்.அடுத்த ஐந்து ஆண்­டு­களில், மத்­திய அரசு, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், 1,000 கோடி டாலர், அன்­னிய நேரடி முத­லீட்டை ஈர்க்க இலக்கு நிர்­ண­யித்து உள்­ளது.உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், அரசு மேற்­கொண்டு வரும் சீர்­தி­ருத்­தங்­க­ளால், விவ­சா­யி­கள், தங்­கள் விளை­பொ­ருட்­க­ளுக்கு உரிய விலையை பெற முடி­யும். மேலும், ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். நாட்­டின் அன்­னிய செலா­வணி வரு­வாய் உய­ரும்.இதற்­காக, மத்­திய அரசு, 6,000 கோடி ரூபாய் முத­லீட்­டில், ‘விவ­சா­யி­கள் பண்ணை திட்­டம்’ என்ற திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இதில், உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், தற்­போது உள்ள திட்­டங்­கள் மற்­றும் புதிய திட்­டங்­கள் ஒன்­றி­ணைக்­கப்­படும்.இத்­திட்­டத்­தில், 20 லட்­சம் விவ­சா­யி­கள் பயன் பெறு­வர். 2019 – 20ம் நிதி­யாண்­டில், நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும், 5,30,500 பேர் வேலை­வாய்ப்பு பெறு­வர் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.ஜப்­பான், ஐரோப்­பிய நாடு­கள் மற்­றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளைச் சேர்ந்த ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், இந்­திய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­பட ஆர்­வ­மாக உள்ளன. குறிப்­பாக, நெதர்­லாந்து, டென்­மார்க், இத்­தாலி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ் நாடு­கள், இந்­தி­யா­வில் கூட்­டாக முத­லீடு செய்­வது குறித்து விசா­ரித்து வரு­கின்றன.இது­வரை, 42 உணவு பூங்­காக்­கள், 100 குளிர்­சா­தன கிடங்­கு­கள் அமைக்க ஒப்­பு­தல் வழங்­கப்­பட்டு உள்­ளது. இதில், 10 பெரிய உணவு பூங்­காக்­கள் மற்­றும் 30 குளிர்­சா­தன கிடங்­கு­கள் செயல்­பாட்­டிற்கு வந்­துள்ளன. எஞ்­சி­யவை, அடுத்த இரு ஆண்­டு­களில், பயன்­பாட்­டிற்கு வந்­து­வி­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
ஏப்., முதல், தற்­போது வரை, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யின் ஏற்­று­மதி, 100 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. மத்­திய அரசு, நவ., 3 -– 5 வரை, டில்­லி­யில், சர்­வ­தேச உணவு மாநாட்டை நடத்த உள்­ளது. இதில், உணவு பதப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட துறை­க­ளைச் சார்ந்த, சர்­வ­தேச நிறு­வ­னங்­கள் பங்கு கொள்ள உள்ளன. இந்த மாநாடு, உண­வுத் துறை­யில் உள்ள உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் இணைந்து செயல்­ப­ட­வும், அவற்­றின் வர்த்­தக வளர்ச்­சிக்­கும் உத­வும்.ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)