பதிவு செய்த நாள்
24 ஜூலை2017
02:09
எந்த ஒரு திட்டம் அல்லது வியூகம் நிறைவேற்றப்பட்டால் தான் அதற்கான பலனை அளிக்கும். ஆனால், பலருக்கும் திட்டங்களை செயலுக்கு கொண்டு வருவது தான் சிக்கலாக இருக்கிறது. இந்த தடையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வழிகளை, ‘தி 4 டிஸிப்ளின்ஸ் ஆப் எக்ஸிகியூஷன்’ புத்தகத்தில் கிறிஸ் மெக்செஸ்னி, சீன் கோவே, ஜிம் ஹுலிங் விவரித்துள்ளனர்.பொதுவாக வர்த்தக நிறுவனங் களில், தலைமை பதவியில் உள்ளவர்கள் தங்கள் வியூகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, வழிகாட்டும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இதில் விவரிக்கப்படும் அடிப்படை அம்சங்கள் இலக்குகளை அடைய நினைக்கும் எவருக்கும் வழிகாட்டக்கூடியது: அடிப்படையில் பார்த்தால் அதிகம் செய்ய முயற்சிக்கும் போது தான் நீங்கள் மிகவும் குறைவாக செய்கிறீர்கள். இதை பலரும் மறந்து விடுகின்றனர். கவனத்தை குவிப்பது தான் எதற்கும் முக்கியமானது. கையில் உள்ள எல்லா விஷயங்களையும் செய்ய முயற்சிப்பதை விட, மிகவும் முக்கியமான ஒரு இலக்கை தேர்வு செய்ய வேண்டும். மற்ற எல்லா விஷயங்களும் தற்போதைய அளவில் இருந்தால் கூட, அவை எல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாக ஆக்கக்கூடிய ஒரு இலக்கை தேர்வு செய்து, அதில் கவனம் செலுத்த வேண்டும். இதை மொத்தத்தில் முக்கிய இலக்கு என கொள்ளலாம். அதாவது இப்போதைக்கு வேறு எவை பற்றியும் கவலைப்படாமல் இதில் மட்டும் கவனம் செலுத்துவது என இருக்க வேண்டும்.பல இலக்குகளை நிறைவேற்ற முயற்சிக்கும் போது எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். ஆனால், ஒன்று அல்லது இரண்டு இலக்குகளை தீர்மானிக்கும் போது அவற்றில் தீவிர கவனம் செலுத்தலாம். இலக்குகளை நிறைவேற்றுவதில் இரண்டு வகையான செயல்கள் இருக்கின்றன. ஒன்று நீங்கள் விரும்பும் இலக்குகளின் அளவுகோலாக அமையும் செயல்கள். மற்றொன்று இலக்கை அடைவதற்காக உங்கள் செயல்பாட்டின் அளவு கோலாக அமையும் செயல்கள். இந்த வகை செயல்கள் தான் வெற்றியை நோக்கி இயக்குபவை. இவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் செய்யக்கூடிய செயல்களில் கவனம் செலுத்தும் போது, இலக்கை அடைவதற்கான உறுதி மேலும் அதிகமாகும். நீங்கள் உடனடியாக மேம்படுத்த வாய்ப்பில்லாத செயலை அளவிட முயற்சி செய்தால், இலக்கை நிறைவேற்றுவதற்கான உத்வேகம் இல்லாமல் போகலாம்.இலக்கை நிறைவேற்ற முயற்சிக்கும் போது அதற்கான எண்ணிக்கை பலகையை உருவாக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை பார்க்கும் போது இலக்கை நோக்கி முன்னேறும் ஊக்கம் பிறக்கும். ஓர் அணியை இயக்கும் போது, மதிப்பெண் பெறாதது அணியில் அங்கம் வகிக்கும் ஊழியர்களை முடுக்கிவிடும்.இதன் பிறகு வாராந்திர அடிப்படையில் செயல்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்யத் தயாராவதன் மூலம் இலக்கை நிறைவேற்றுவதில் உள்ள ஈடுபாட்டையும் உறுதி செய்து கொள்கிறீர்கள். ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும்போது, பொதுவான விஷயங்களை பேசுவதை விட, பலனை அளவிடக் கூடிய குறிப்பிட்ட செயல்களில் தான் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|