பதிவு செய்த நாள்
24 ஜூலை2017
02:10
முதல் சேமிப்புசேமிப்பு என்ற வார்த்தை எட்டிக்காயாக கசக்கலாம். இப்போது தான் சம்பாதிக்கத் துவங்கியிருக்கிறோம் அதற்குள் சேமிப்பா? என, நினைக்கலாம். ஆனால், இளமையில் சேமிக்கத் துவங்குவதைவிட, உங்கள் எதிர்காலத்தை வளமாக்க கூடிய விஷயம் வேறு இருக்க முடியாது. தவிர, சேமிப்பு என்பது ஒரு பழக்கமாக உருவாக வேண்டும். எனவே விரும்பிய செலவுகளை செய்யும் முன் ஒரு தொகையை சேமியுங்கள்.--
பட்ஜெட் தேவைசேமிப்பு போலவே பட்ஜெட் எனும் வார்த்தையும் உங்களை அதிருப்தியில் ஆழ்த்தலாம். பட்ஜெட்டை எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என வாதாடலாம். ஆனால், பட்ஜெட் போடுவதன் மூலம் உங்கள் செலவுகளை அறிந்து கொள்வதோடு, எவ்வளவு சேமிக்க முடியும் என்றும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையில்லாத செலவுகளையும் கட்டுப்படுத்தலாம்.
முதல் சம்பளம், முதல் கடமைமுதல் சம்பளம் கையில் கிடைக்கும் போது உள்ளம் துள்ளிக் குதிக்கவே செய்யும். சுயமாக சம்பாதிக்க துவங்கியிருப்பது நிதி சுதந்திரத்தின் அடையாளம் என்பதால் நம்பிக்கையுடன் உணரச் செய்யும். இந்த உத்வேகத்துடன், முதல் மாத சம்பளத்தை இஷ்டம் போல செலவிடவும் தோன்றும். ஆனால், நிதி எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், முதல் சம்பளம் பெற்ற பின் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் இவை:
--காப்பீடு பெறுங்கள்இளம் வயதில் சேமிக்கத் துவங்குவது போலவே உங்களுக்கான காப்பீடு பெறுவதும் அவசியம். உங்களுக்கு தேவையான ஆயுள் காப்பீடு டெர்ம் பாலிசி பாதுகாப்பு கவசமாக விளங்கும். இளம் வயதில் காப்பீடு பெறும் போது அதற்கான செலவும் குறைவாக இருக்கும். காப்பீடு பெறுவதற்கு முன், அவசர கால நிதியை உருவாக்கி கொள்ள முயற்சிப்பதும் நல்லது. அதே போல, நிதிச்சேவைகளில் முதலீடு செய்வதும் அவசியம்.
இலக்கு என்ன?வாழ்க்கையில் எப்போதுமே இலக்கு அவசியம். நிதி விஷயங்களில் இலக்கு இல்லாமல் எதையும் சரிவர செய்ய முடியாது. இனி வரும் ஆண்டுகளில் உங்களுக்கான இலக்கு எவை என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். கார் வாங்குவது, சொந்த வீடு, வெளிநாட்டு சுற்றுலா என, உங்கள் இலக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அடைய என்ன செய்ய வேண்டும் என தீர்மானித்து செயல்படுவது முக்கியம்.
ஓய்வுகால திட்டமிடல்பணிக்கு சேர்ந்தவுடன் ஓய்வுகால திட்டமிடலா? என கேட்கலாம். ஆனால், இளம் வயதில் ஓய்வு கால திட்டமிடலை துவங்குவதன் மூலம் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். பி.எப்., மற்றும் பி.பி.எப்., முதலீட்டை இப்போதே துவங்குவதன் மூலம் கூட்டு வட்டியின் பலனை நீண்ட கால நோக்கில் பெறலாம். என்.பி.எஸ்., எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தையும் பரிசீலிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|