உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடுஉணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக் கடனை அடைக்கும் முன் யோசிக்க வேண்­டி­யவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
02:10

வீட்டுக் கட­னுக்­கான மாதத் தவ­ணையை செலுத்தி வரு­ப­வர்கள் ஏதேனும் ஒரு கட்­டத்தில், அசலை முன்­கூட்­டியே அடைப்­பது சரி­யாக இருக்­குமா? என யோசிக்­கலாம். கடன் தவ­ணையை தொடர்ந்து செலுத்­து­வதை விட, முன்­கூட்­டியே அசலை அடைக்க முயற்­சிப்­பது எந்த அள­வுக்கு பலன் தரு­வ­தாக இருக்கும் என்­பதன் அடிப்­ப­டை­யி­லேயே இந்த முடிவு அமைய வேண்டும். இதற்கு மூன்று முக்­கிய அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்டும் என, வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.வட்டி விகிதம்வீட்­டுக்­கடன் அசலை அடைக்க தீர்­மா­னிக்கும் முன் வட்டி விகி­தத்தை கவ­னிக்க வேண்டும் என்­கின்­றனர். பொது­வாக, வீட்டுக் கட­னுக்­கான வட்டி விகிதம், மொத்­த­மாக முத­லீடு செய்யும் தொகைக்­கான பல­னை­விட குறை­வாக இருந்தால், வீட்டுக் கடனை தொடர்­வதே சரி­யாக இருக்கும் என்­கின்­றனர். உதா­ர­ணத்­திற்கு, 10 லட்சம் ரூபாய்க்­கான வீட்­டுக்­கடன் இருக்­கி­றது என வைத்­துக்­கொள்வோம். இந்த தொகையை அடைத்து விட்டால், வீட்டுக் கட­னுக்­கான மாதாந்­திர வட்டித் தொகையை மிச்சம் செய்­யலாம். இப்­படி மிச்­ச­மாகும் வட்­டித்­தொகை, 8.5 சத­வீதம் என வைத்­துக்­கொள்வோம். இப்­போது கையில் உள்ள தொகையை ஏதேனும் நிதி சாத­னத்தில் முத­லீடு செய்­வதன் மூலம், கட­னுக்­கான வட்­டித்­தொ­கையை விட கூடுதல் வட்டி வரு­மானம் கிடைக்கும் என்றால், அந்த தொகையை முத­லீடு செய்­து­விட்டு, கடன் தவ­ணையை தொடர்­வதே புத்­தி­சா­லித்­த­ன­மாக இருக்கும். கடனை அடைக்க முயற்­சிக்கும் போது இந்த கூடுதல் பலனை இழக்க நேரலாம்.கடன் காலம்கட­னுக்­கான காலத்­தையும் கணக்கில் எடுத்­துக் ­கொள்ள வேண்டும். கடனை அடைப்­ப­தற்­கான காலம் ஐந்து ஆண்டிற்கும் குறை­வாக இருந்தால், வட்­டியை விட அசலில் அதிகம் செலுத்தும் வாய்ப்பு இருக்­கி­றது. அச­லை­விட வட்­டிக்­கான பகுதி அதிகம் இருக்கும் போது தான் முன்­கூட்­டியே அடைப்­பது பலன் மிக்­க­தாக இருக்கும். மேலும், கடனை அடைக்கும் தொகையை முத­லீடு செய்தால் வட்­டியை விட கூடுதல் பலன் பெறும் வாய்ப்பு இருக்­கலாம். ஆனால், இத்­த­கைய முத­லீட்டில் 5 முதல் 7 ஆண்­டுகள் வரை முத­லீடு செய்தால் தான் எதிர்­பார்த்த பலன் கிடைக்கும் என்­ப­தையும் நினைவில் கொள்ள வேண்டும்.வரிச்­ச­லுகைவிட்டுக் கட­னுக்கு வரிச்­ச­லு­கையும் இருக்­கி­றது. எனவே, வரு­மான வரி வரம்பில் வரு­பவர் என்றால், வரிச்­ச­லு­கை­யையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். வரிச்­ச­லு­கையை பயன்­ப­டுத்­திக் ­கொண்ட பின், கையில் உள்ள தொகையை முத­லீடு செய்­வதால் அதிக பலன் கிடைக்கும் என்றால் கடனை தொடர்­வதே சரி­யாக இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)