தங்கம் விலை சிறிதளவு உயர்வுதங்கம் விலை சிறிதளவு உயர்வு ... எஸ் அண்டு ஐ சர்வீசஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம் எஸ் அண்டு ஐ சர்வீசஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம் ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2017
06:47

எஸ்.இ.இசட்., என்று சொல்­லக்­கூ­டிய, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தன் நோக்­கமே, ஏற்­று­ம­தியை உயர்த்­து­வ­தற்­கா­கத்­தான். ஆனால், தற்­போது சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் மீது, ஜி.எஸ்.டி., விதித்­தால் அது எவ்­வாறு ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­தும்?– கோகுல் சந்­தர், டி.சி.எஸ்.,சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்­தில் உள்ள நிறு­வ­னத்­துக்கோ அல்­லது சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்தை உரு­வாக்­கும் நிறு­வ­னத்­திற்கோ சப்ளை செய்­யும்­போது, அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது. அத்­த­கைய பரி­வர்த்­தனை, ஜீரோ ரேட்­டேட் (பூஜ்ஜிய சத­வீ­தம்) சப்ளை என, கரு­தப்­படும். இத­னால் சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்­தில் உள்ள நிறு­வ­னத்­திற்கு எந்த பாதிப்­பும் இல்லை. இது ஏற்­று­ம­தி­யை­யும் பாதிக்­காது.
ஐயா, நாங்­கள் புதி­தாக, ஜி.எஸ்.டி., விண்­ணப்­பிக்க உள்­ளோம். அதன் வழி­மு­றை­களை விளக்­க­வும். உங்­களின், ‘கேள்­வி­கள் ஆயி­ரம்’ பகுதி மிக­வும் பய­னுள்­ள­தாக உள்­ளது, அதற்கு நன்றி.– கிரு­பா­க­ரன், காரைக்­குடிநீங்­கள், www.gst.gov.in என்ற இணை­ய­த­ளத்­தின் மூலம், இல­வ­ச­மாக, ஜி.எஸ்.டி., புதிய பதி­விற்கு விண்­ணப்­பிக்­க­லாம். ஜி.எஸ்.டி., (​ஆர்.இ.ஜி., 1​)​ எனும் படி­வத்­தின் மூலம், மின்­னணு முறை­யில் விண்­ணப்­பிக்க வேண்­டும். விண்­ணப்­பித்த, மூன்று வேலை நாட்­க­ளுக்­குள், உங்­க­ளது, ஜி.எஸ்.டி., பதிவை பெற­லாம். ஒரு­வேளை, ​விண்­ணப்­பத்­தில் குறை­பா­டு­கள் இருப்­பின், அதை சரி செய்து விண்­ணப்­பித்த, 20 நாட்­க­ளுக்­குள், ஜி.எஸ்.டி., பதிவை பெற்­று­வி­ட­லாம்.
சார், ஜி.எஸ்.டி.,க்கு முன் விற்­பனை செய்த பொருட்­க­ளுக்கு, ‘வாரன்டி’யின் அடிப்­ப­டை­யில், பழு­தா­கிய உதிரி பாகங்­களை, இல­வ­ச­மாக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தற்­போது அளித்­தால், அத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா?– சசி­த­ரன், திருச்சிநீங்­கள், ‘வாரன்டி’யின் கீழ் இல­வ­ச­மாக பொருட்­களை வழங்­கும் கார­ணத்­தால், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது. ஆனால், இல­வ­ச­மாக வழங்­கிய பொருட்­க­ளுக்கு, ​​உங்­க­ளால் உள்­ளீட்டு வரி பயன் பெற இய­லாது.​
நான், ஜவுளி உற்­பத்­தி­யில் உள்­ளேன். கொள்­மு­தல் செய்­யும் போது, நுாலுக்கு, 18 சத­வீத வரி­யும், அதை, ஆடை­யாக விற்­பனை செய்­யும் போது, 5 சத­வீத வரி­யி­லும் விற்­பனை செய்­கி­றேன். என் ஆண்டு பரி­வர்த்­த­னையை கணக்­கில் கொள்­ளும் போது, கொள்­மு­தல் செய்­யும் போது செலுத்­திய, 18 சத­வீத வரி அதிக தொகை­யாக இருக்­கும். அதை, ‘ரீபண்டு’ ஆக பெற்­றுக் கொள்ள முடி­யுமா?– தீன­த­யா­ளன், திருப்­பூர்சில விதி­வி­லக்­கான சம­யங்­களில் பொருட்­களை வாங்­கும் போது, அதிக சத­வீ­தத்­தி­லும், பொருட்­களை விற்­கும் போது, குறைந்த சத­வீ­தத்­தி­லும் வரி விதிக்­கப்­படும். கொள்­மு­தல் செய்­யும் போது செலுத்­திய வரி, உங்­க­ளுக்கு உள்­ளீட்டு வரி பய­னாக கிடைக்க பெறும்​.​ ஆனால், அதை, ‘ரீபண்டு’ ஆக திரும்ப பெற இய­லாது. அது உங்­க­ளு­டைய, ஜி.எஸ்.டி., கணக்­கில், ஐ.டி.சி., பய­னாக இருக்­கும்​.​ அதை, எப்­போது வேண்­டு­மா­னா­லும் வரி செலுத்த உப­யோ­கப்­ப­டுத்தி கொள்­ள­லாம்.
ஐயா, நாங்­கள், செம்­பி­னால் செய்த பாத்­தி­ரங்­கள் மற்­றும் சமை­ய­லறை உப­யோ­கப் பொருட்­களை உற்­பத்தி செய்து விற்­ப­னை­யும் செய்­கி­றோம். இதில், எத்­தனை சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்?– சங்­கர், உமை­யாள்­பு­ரம்இதற்கு நீங்­கள், 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும்.
சார், வரு­மான வரி சட்­டத்­தில் உள்­ளது போல், நுகர்­வோ­ருக்கு தனி சத­வீத வரி, நிறு­வ­னங்­க­ளுக்கு தனி சத­வீத வரி என, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் இல்­லையா?– கிருஷ்­ண­கு­மார், திரு­வா­ரூர்ஜி.எஸ்.டி., சட்­ட­மா­னது, ஒரு மறை­முக வரி அமைப்­பா­கும். இது, ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற கோட்­பாட்­டிற்கு இணங்க, நாடு முழு­வ­தும் ஒரு பொரு­ளின் மீது பார­பட்­சம் இல்­லாத, குறிப்­பிட்ட ஒரே சத­வீத வரி விதிக்­கப்­படும். எனவே, இந்த சட்­டத்­தில் வரு­மான வரி சட்­டத்­தில் உள்­ளது போல், நுகர்­வோர் மற்­றும் நிறு­வ­னம் என்ற பாகு­பாடு இல்லை.
சார், நாங்­கள், எரி­பொ­ரு­ளாக உப­யோ­கப்­ப­டுத்­தப்­படும் விற­கு­களை, மொத்­த­மாக, பல கிரா­மங்­க­ளி­லி­ருந்து வாங்கி, தமி­ழ­கத்­தில் பல இடங்­க­ளுக்கு அனுப்பி வரு­கி­றோம். எங்­க­ளது ஆண்டு மொத்த விற்­பனை, சரா­ச­ரி­யாக, 30 லட்­சம் ரூபாய் – ​​35 லட்­சம் ரூபாய் வரை இருக்­கும். இதற்கு நாங்­கள், எத்­தனை சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்?– காம­ராஜ், கோவைஎரி­பொ­ரு­ளாக உப­யோ­கப்­ப­டுத்­தும் விற­கு­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யிலி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. நீங்­கள், விலக்கு அளிக்­கப்­பட்ட பொருட்­களை, உள் மாநி­லத்­தில் மட்­டும் விற்­பனை செய்­ப­வ­ராக இருப்­பின், நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய தேவை­யில்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)