பதிவு செய்த நாள்
25 ஜூலை2017
18:04
மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. இருப்பினும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
முன்னணி நிறுவன பங்குகளின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் அது தொடர்பான பங்குகள் உயர்வுடன் இருப்பதுடன், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) சென்செக்ஸ் 128.43 புள்ளிகள் உயர்ந்து 32,320.86 எனும் புதிய சாதனையையும், நிப்டி 44.90 புள்ளிகள் உயர்ந்து 10,011.30-ஆகவும் வர்த்தகமாகின.
ஆனால் இந்த ஏற்றம் நீடிக்கவில்லை. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.60 புள்ளிகள் சரிந்து 32,228.27-ஆகவும், நிப்டி 1.85 புள்ளிகள் சரிந்து 9,964.55-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|