தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிவு ... ‘19 சதவீத மக்கள் இன்னும் வங்கி சேவை பெறவில்லை’ ‘19 சதவீத மக்கள் இன்னும் வங்கி சேவை பெறவில்லை’ ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
06:40

‘ஜாப் ஒர்க்’ செய்­ப­வ­ரின் இருப்­பி­டத்­தி­லி­ருந்து, முதன்மை சப்­ளை­ய­ரா­கிய எங்­கள் இடத்­திற்கு சரக்­கு­களை கொண்டு வரா­மல், நேர­டி­யாக வழங்­கல் செய்ய இய­லுமா?– பரி­மளா, சைதாப்­பேட்டைஇய­லும். ‘ஜாப் ஒர்க்’ செய்­யும் வேலை பணி­யா­ளர் பதிவு செய்­த­வ­ராக இருந்­தால், சரக்­கு­களை அவ­ரது இருப்­பி­டத்­தி­லி­ருந்தே, நேர­டி­யாக வழங்­கல் செய்ய முடி­யும். ஒரு­வேளை, வேலை பணி­யா­ளர் பதிவு செய்­யாத நப­ராக இருப்­பின், அவ­ரது முக­வ­ரியை, தொழில் புரி­யும் கூடு­தல் இட­மாக, பணி அளிப்­ப­வர் அறி­விக்க வேண்­டும்.
நாங்­கள், ‘மைக்ரோ பைனான்ஸ்’ நிறு­வ­னத்தை நடத்தி வரு­கி­றோம். எங்­க­ளுக்கு, 50 சத­வீத உள்­ளீட்டு வரி பயன் என்ற கட்­டுப்­பாடு உள்­ளது. இந்த கட்­டுப்­பாடு, நாங்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் செலுத்­தும் வரிக்­கும் உண்டா அல்­லது அத்­த­கைய வரித் தொகையை, முழு­மை­யாக உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாமா?– குமார், மதுரைவங்கி மற்­றும் நிதி சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, உள்­ளீட்டு வரி பய­னா­னது, 50 சத­வீ­தம் மட்­டுமே கிடைக்­கப் பெறும். இந்த விதி­யா­னது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் செலுத்­திய வரிக்­கும் பொருந்­தும். எனவே, தங்­க­ளால், 50 சத­வீ­தத்தை மட்­டுமே, உள்­ளீட்டு வரி பய­னாக பெற முடி­யும்.
உண­வ­கங்­களில், 60 ரூபாய்க்கு விற்ற பண்­டங்­கள், ஜி.எஸ்.டி., விதிப்­பிற்கு பின், 72 ரூபா­யாக உயர்த்தி, பின் அதற்கு, 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி.,யும் விதிக்­கின்­ற­னர். ஜி.எஸ்.டி., வந்த பின், விலை குறை­யும் என, அரசு கூறி­யி­ருந்த நிலை­யில், இத்­த­கைய விலை உயர்வு பற்றி தங்களின் கருத்து என்ன?– கோகுல், டி.சி.எஸ்.,ஜி.எஸ்.டி.,யின் பயனை, அதை அறி­மு­கப்­ப­டுத்­திய சில நாட்­க­ளி­லேயே உணர முடி­யாது. அதிக உள்­ளீட்டு வரி பய­னால், அனைத்து பொருட்­களின் விலை­யும் படிப்­ப­டி­யாக நிச்­ச­யம் குறை­யும். நீங்­கள் கூறி­யது போல, அனைத்து உண­வ­கங்­க­ளி­லும் விலை­யேற்­றம் செய்­ய­வில்லை. சில உண­வ­கங்­களில் விலை ஏற்­றம் செய்­துள்­ள­தை­யும் மறுக்க முடி­யாது. அவ்­வா­றான விலை­யேற்­றத்­துக்கு கார­ணம், ஜி.எஸ்.டி., குறித்த சரி­யான புரி­தல் இல்­லா­தது தான். விலை­யேற்­ற­மும் செய்து, அதில், 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி.,யும் விதித்­தல் தவ­றா­னது. இதற்கு, அரசு தக்க நட­வ­டிக்கை எடுக்க ஆயத்­த­மாகி வரு­கிறது. அதற்கு, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் வழி­வ­கை­யும் உள்­ளது.

ஐயா, நான், ஒரு வெளி­நாட்டு நிறு­வ­னத்­தின், இந்­திய துணை நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­கி­றேன். எங்­க­ளது வெளி­நாட்டு கம்­பெனி, சில நேரங்­களில், இந்­திய துணை நிறு­வ­னத்­திற்கு சாப்ட்­வேர் சேவையை, கட்­ட­ண­மில்­லா­மல் வழங்­கு­கிறது. இத்­த­கைய சேவைக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி விதிக்­கப்­ப­டுமா?– முகேஷ், அயப்­பாக்­கம்பொது­வாக, மறு பய­னில்­லாத (கட்­ட­ணம் இல்­லாத) சேவை­யின் இறக்­கு­ம­திக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது. ஆனால், பதிவு பெற்ற ஒரு நபர், வியா­பார முன்­னேற்­றத்­தின் பகு­தி­யாக தொடர்­பு­டைய நப­ரி­ட­மி­ருந்தோ அல்­லது வெளி­நாட்­டில் இருக்­கும் தன்­னு­டைய வேறொரு நிறு­வ­னத்­தி­லி­ருந்தோ, சேவை­களை இறக்­கு­மதி செய்­தால், மறு பயன் எது­வும் பெற­வில்லை என்­றா­லும், அது வழங்­க­லாக கரு­தப்­படும். அத்­த­கைய வழங்­க­லுக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி விதிக்­கப்­படும்.
சார், வரு­டாந்­திர, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லும், இறுதி,ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லும் ஒன்றா?– கவுரி, சங்­க­ரன்­கோ­வில்இல்லை. வரு­டாந்­திர, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கலை, சாதா­ரண வரி செலுத்­து­வோ­ராக பதிவு செய்­துள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் சமர்ப்­பிக்க வேண்­டும். இதை, ஜி.எஸ்.டி.ஆர்., 9 எனும் படி­வத்­தில், அடுத்த நிதி­யாண்டு டிச., 31க்குள் தாக்­கல் செய்ய வேண்­டும். இறுதி, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் என்­பது, ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்­வ­தற்­காக, தாக்­கல் செய்­யும் படி­வ­மா­கும். ஜி.எஸ்.டி.ஆர்.இ.ஜி., 16 எனும் படி­வத்­தில் தாக்­கல் செய்ய வேண்­டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)