திறன் வளர்ப்பு பயிற்சியில் தமிழகத்திற்கு 3வது இடம்திறன் வளர்ப்பு பயிற்சியில் தமிழகத்திற்கு 3வது இடம் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.43 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.43 ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலோங்க சேமிப்பு – முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
06:46

புது­டில்லி : ‘நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம், மேலும் அதி­க­ரிக்க வேண்­டு­மென்­றால், சேமிப்பு மற்­றும் முத­லீட்டு திட்­டங்­களை ஊக்­கு­விக்க வேண்­டும்’ என, மத்­திய அர­சுக்கு கொள்­கை­களை வகுத்து தரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு வலி­யு­றுத்தி உள்­ளது.
இந்த அமைப்பு, நடப்பு நிதி­யாண்­டு­டன் முடி­வ­டை­யும், 12வது ஐந்­தாண்டு திட்­டம் குறித்து வெளி­யிட்­டுள்ள, மதிப்­பீட்டு அறிக்கை: நாட்­டின் சேமிப்பு மற்­றும் முத­லீ­டு­களின் வளர்ச்சி விகி­தம், மிகக் குறை­வாக உள்­ளது கவலை அளிக்­கிறது. எனவே, இந்த வளர்ச்சி விகி­தத்தை அதி­க­ரிக்க, தேவை­யான கொள்கை திட்­டங்­களை விரைந்து உரு­வாக்கி, செயல்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

முத­லீ­டு­களை ஊக்­கு­விப்­ப­து­டன், அவற்­றுக்­கான திறன்­களை உரு­வாக்கி, உரிய சூழலை ஏற்­ப­டுத்தி தர வேண்­டும். முத­லீ­டு­கள் அதி­க­ரிக்க வேண்­டு­மென்­றால், வரி விதிப்பு நிலை­யா­க­வும், தீர்­மா­னிக்­கப்­பட்ட ஒன்­றா­க­வும் இருக்க வேண்­டும். முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் நம்­பிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும்­பட்­சத்­தில், அதி­க­ள­வில், நீண்ட கால அன்­னிய முத­லீ­டு­களை, நிலை­யாக ஈர்க்க முடி­யும்.

ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, அதி­க­மா­னோரை வரி வளை­யத்­திற்­குள் கொண்டு வந்து, அர­சின் வரி வரு­வாயை அதி­க­ரிக்க துணை புரி­யும். அதே சம­யம், மக்­கள் வரிக்­காக செல­வி­டு­வது குறை­யும்; ஏற்­று­ம­தி­யில் போட்டி அதி­க­ரிக்­கும். ஜி.எஸ்.டி.,யால், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 1 – 2 சத­வீ­தம் வளர்ச்சி காணும்.நீண்ட கால முத­லீ­டு­கள் இல்­லா­த­தால், அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­களை நிறை­வேற்ற முடி­யா­மல் உள்­ளது; பல திட்­டங்­கள் முடங்கி உள்ளன. போதிய அள­வில், கட்­டு­மான நிறு­வ­னங்­களின் பங்­கேற்பு இல்­லாத கார­ணத்­தா­லும், திட்­டங்­களை செயல்­ப­டுத்த முடி­யாத நிலை உள்­ளது.

இது போன்ற தடை­களை நீக்கி, முடங்­கிக் கிடக்­கும் திட்­டங்­க­ளுக்கு உயிர் கொடுக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இதன் மூலம், உற்­பத்தி பெரு­கும்; முத­லீ­டு­கள் அதி­க­ரிக்­கும். நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, பண­வீக்­கத்தை கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­ப­தும் அவ­சி­ய­மா­கும். இவ்­வ­ளர்ச்சி, நிலை­யாக நீண்ட காலம் நீடித்­தி­ருக்க, பணப்­பு­ழக்க நிர்­வா­கத்­தி­லும், நிதிக் கொள்கை வடி­வ­மைப்­பி­லும் ஒருங்­கி­ணைப்பு இருக்க வேண்­டி­யது முக்­கி­யம். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

புதிய முறை:
பல ஆண்­டு­க­ளாக கடை­பி­டிக்­கப்­பட்டு வந்த, ஐந்­தாண்டு திட்ட மதிப்­பீடு முறை, தற்­போது மாற்­றப்­பட்டு உள்­ளது. இந்த முறை, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, முக்­கிய கார­ணி­க­ளாக விளங்­கும் ஒன்­பது அம்­சங்­கள் ஆய்­வுக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டன. அவற்­றின் அடிப்­ப­டை­யில், பர­வ­லான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும், முன்­னேற்­றத்­திற்­கும் மேற்­கொள்ள வேண்­டிய சீர்­தி­ருத்­தங்­கள் சுட்­டிக்­காட்­டப்­பட்டு உள்ளன.
-அர­விந்த் பன­க­ரியா,துணைத் தலை­வர், ‘நிடி ஆயோக்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)