பதிவு செய்த நாள்
29 ஜூலை2017
06:26
ஐதராபாத்: ‘‘உணவு பதப்படுத்துதல் துறை, கடந்த இரு மாதங்களில், வெளிநாடுகளில் இருந்து, 18.3 கோடி டாலர் முதலீட்டை குவித்துள்ளது,’’ என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: உணவு பதப்படுத்துதல் துறையில், நடப்பாண்டு, மே – ஜூன் வரை, வெளிநாடுகளில் இருந்து, 18.3 கோடி டாலர் முதலீடு குவிந்துள்ளது. கடந்த ஆண்டு, பல பிராண்டு சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீடு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இத்துறையில் அன்னிய நேரடி முதலீடு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் அமைய உள்ள, 42 மெகா உணவு பூங்காக்களில், உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 31 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குவியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|