பதிவு செய்த நாள்
29 ஜூலை2017
06:27
மும்பை: சர்வதேச ஆய்வு நிறுவனமான, ‘கன்டர் வேர்ல்டுபேனல்’ வெளியிட்டுள்ள அறிக்கை: உலகளவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொருட்களின் பயன்பாடு குறித்து, 82 ஆயிரம் குடும்பங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடும்ப அங்கத்தினர்களின் பழக்கம், பயன்பாடு, விருப்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில், தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த ஆய்வில், உலகளவில் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவது தெரிய வந்தது. நுகர்வோர், சாதாரண பொருட்களை விட, தனிச் சிறப்பு வாய்ந்த பொருட்களையும், சந்தையின் புதிய வரவுகளையும் வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டுவது புரிந்தது. குறிப்பாக, தனிநபர் அழகு பொருட்கள், முகப் பொலிவு கிரீம், சரும பராமரிப்பிற்கான சீரம்ஸ், கேசத்திற்கு பயன்படுத்தும் ஜெல் போன்றவற்றை வாங்க, நுகர்வோர் பெரிதும் விரும்புகின்றனர்.
மேலும், சுலபமாக சமைக்க உதவும் பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மின்னணு வணிகம் மற்றும் வலைதள மளிகை கடைகளும், நுகர்பொருட்கள் விற்பனை உயர துணை புரிந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|