பதிவு செய்த நாள்
30 ஜூலை2017
01:26
புதுடில்லி : செக்யூரிட்டிஸ் அண்டு இன்டெலிஜன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்குகிறது.ஒரு பங்கின் விலை, 805 -– 815 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், 18 பங்குகள் மற்றும் அதன் மடங்குகள் கோரி, முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஆக., 2ல் முடிவடையும் இந்த பங்கு வெளியீட்டின் மூலம், நிறுவனம், 780 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.‘இத்தொகை, அதிக மதிப்புள்ள பாதுகாப்பு சாதனங்களை வாங்கவும், ஏற்கனவே வாங்கிய கடனை திரும்பச் செலுத்தவும் பயன்படுத்திக் கொள்ளப்படும்’ என, இந்நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் தெரிவித்து உள்ளது.இந்நிறுவனம், பாதுகாப்பு சேவை தொடர்பான தீர்வுகள், பாதுகாப்பான நிதி போக்குவரத்து மற்றும் நிர்வாக சேவை வசதிகளை வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|