பதிவு செய்த நாள்
30 ஜூலை2017
01:26
புதுடில்லி : ‘‘வலைதளங்களில் புழங்கும், ‘விர்ச்சுவல் கரன்சி’ பயன்பாடு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டு உள்ளது,’’ என, மத்திய நிதித் துறை இணையமைச்சர்அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்து உள்ளார்.வலைதளங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் பணம், ‘விர்ச்சுவல் கரன்சி’ அல்லது மெய்நிகர் பணம் என, அழைக்கப்படுகிறது. தொட்டு உணர முடியாத, கண்ணால் மட்டுமே காணக்கூடிய இந்த பணம் சார்ந்த பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த, சர்வதேசகட்டுப்பாட்டு அமைப்புஎதுவுமில்லை.எனினும், இந்த மெய்நிகர் பணப் பரிவர்த்தனையில், இந்தியா உட்பட ஏராளமான நாடுகளைச் சேர்ந்தோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணப் பரிவர்த்தனை, பயங்கரவாத அமைப்புகளுக்கும், போதை மருந்து கடத்தலுக்கும் பயன்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இது குறித்து, அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:மெய்நிகர் பணப் பரிவர்த்தனை குறித்து ஆராய, ஒழுங்குமுறை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, சமீபத்தில் கூடி விவாதித்தது. அதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக, மேலும் பல்வேறு அம்சங்களை ஆராயும் பணி நடைபெறுகிறது. இப்பணி முடிவடைந்ததும், மெய்நிகர் பணப் பரிவர்த்தனை குறித்த, அரசின் கொள்கை வெளியிடப்படும்இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|