நிதி தொழிற்நுட்ப சேவை ‘டாப் – 10’ பட்டியலில் இந்தியா நிதி தொழிற்நுட்ப சேவை ‘டாப் – 10’ பட்டியலில் இந்தியா ... வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி? வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி? ...
சிறிய நிறுவனங்களுக்கு ‘பந்தன்’ வங்கி அறிவுரை சிறந்த ஆடிட்டரை அமர்த்தினால் மிக சுலபமாக கடன் பெறலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2017
01:28

கோல்­கட்டா : ‘‘சிறந்த ஆடிட்டர் மூலம், நிதி கணக்கை தணிக்கை செய்­யும், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, வங்­கி­கள் மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் தாரா­ள­மாக கடன் வழங்­கும்,’’ என, ‘பந்­தன்’ வங்கி நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­காரி சந்­தி­ர­சே­கர் கோஷ்தெரி­வித்து உள்­ளார்.கோல்­கட்­டா­வில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான நிதி­யு­தவி முகா­மில், அவர் மேலும் பேசி­ய­தா­வது:குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், அவற்­றின் நிதி கணக்கு விப­ரங்­களை தணிக்கை செய்­வ­தற்கு, ஆடிட்டர் எனப்படும், பட்­டய கணக்­கா­ளரைஅமர்த்­திக் கொள்ள வேண்­டும். இதை, செல­வாக கரு­தா­மல், முத­லீ­டாக கருத வேண்­டும்.பட்­டய கணக்­கா­ள­ரின் கையொப்­ப­மு­டன், நிதி கணக்கு தணிக்கை விப­ரங்­களை அளிக்­கும் நிறு­வ­னங்­கள், வங்­கி­களின் நம்­பிக்­கையை சம்­பா­திக்­கும். அதன் பய­னாக, நிறு­வ­னங்­களின் முன்­னேற்­றத்­திற்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளை­யும் வங்­கி­கள் வழங்­கும்.வங்கி கடன் பெற, பல நிறு­வ­னங்­கள் இடைத்­த­ர­கர்­களை நாடு­கின்றன. அது, சரி­யான வழி­யல்ல. வங்­கி­களும், இது போன்ற நபர்­களை ஊக்­கு­விப்­ப­தில்லை.இதை, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் புரிந்து கொண்டு, நேர­டி­யாக வங்­கி­களை அணுக வேண்­டும். அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளுக்கு, வங்­கி­களும் ஆத­ர­வ­ளிக்­கும். இடைத்­த­ர­கர்­களை நாடு­வதை விட, பட்­டய கணக்­கா­ளர்­களை நாடு­வதே சிறந்­தது.அவர்­கள், அனைத்து விதி­களை­யும் முறை­யாக பின்­பற்­று­வர் என்­ப­தால், நிறு­வ­னங்­கள், வங்கி கடன் பெறு­வது உட்­பட, வணிக வளர்ச்­சிக்­கான முயற்­சி­களை, சுல­ப­மாக மேற்­கொள்ள முடி­யும்.வங்­கி­யில் சுல­ப­மாக கடன் பெற, அதற்­கான விண்­ணப்ப நடை­மு­றை­களை சுல­ப­மாக்க வேண்­டும்.அது போல, வங்­கி­கள், கடன் வழங்­கும் போது பின்­பற்­றும் நிர்­வாக ரீதி­யி­லான செயல்­பா­டு­க­ளை­யும் எளிமைப்­ப­டுத்த வேண்­டும். வங்­கி­களின் வாராக்­க­டன் சுமை பெருக, பெரிய கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களே கார­ணம். அவற்­றி­லும், சொற்ப நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து தான், பெரு­ம­ளவு வாராக்­க­டன்வசூ­லிக்க வேண்டி உள்­ளது.இது போன்ற நிறு­வ­னங்­க­ளால், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் தான் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்றன.வங்­கி­கள், பாது­காப்பு கருதி, சிறிய நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்க தயங்­கு­கின்றன. இது, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை வளர்ச்­சி­யில் தாக்கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
வளர்ச்சியில் முக்கிய பங்குமொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை­யின் பங்­க­ளிப்பு, 6 சத­வீ­த­மாக உள்­ளது. இத்­துறை, தொழில் துறை­யின் ஒட்­டு­மொத்த உற்­பத்­தி­யில், 40 சத­வீ­தம்; ஏற்­று­ம­தி­யில், 45 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளது.இந்­தி­யா­வில், 5.10 கோடி குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மூலம், பல கோடி பேர் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். இத்­துறை, வேலை­வாய்ப்­பில், வேளாண் துறைக்கு அடுத்த இடத்­தில் உள்­ளது.நாட்­டின் வளர்ச்­சி­யில், முக்­கிய பங்­காற்றி வரு­கிறது.– சந்­தி­ர­சே­கர் கோஷ்நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­காரி, பந்­தன் வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)