பதிவு செய்த நாள்
30 ஜூலை2017
01:28
கோல்கட்டா : ‘‘சிறந்த ஆடிட்டர் மூலம், நிதி கணக்கை தணிக்கை செய்யும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வங்கிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தாராளமாக கடன் வழங்கும்,’’ என, ‘பந்தன்’ வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர் கோஷ்தெரிவித்து உள்ளார்.கோல்கட்டாவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான நிதியுதவி முகாமில், அவர் மேலும் பேசியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் நிதி கணக்கு விபரங்களை தணிக்கை செய்வதற்கு, ஆடிட்டர் எனப்படும், பட்டய கணக்காளரைஅமர்த்திக் கொள்ள வேண்டும். இதை, செலவாக கருதாமல், முதலீடாக கருத வேண்டும்.பட்டய கணக்காளரின் கையொப்பமுடன், நிதி கணக்கு தணிக்கை விபரங்களை அளிக்கும் நிறுவனங்கள், வங்கிகளின் நம்பிக்கையை சம்பாதிக்கும். அதன் பயனாக, நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வங்கிகள் வழங்கும்.வங்கி கடன் பெற, பல நிறுவனங்கள் இடைத்தரகர்களை நாடுகின்றன. அது, சரியான வழியல்ல. வங்கிகளும், இது போன்ற நபர்களை ஊக்குவிப்பதில்லை.இதை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் புரிந்து கொண்டு, நேரடியாக வங்கிகளை அணுக வேண்டும். அத்தகைய நிறுவனங்களுக்கு, வங்கிகளும் ஆதரவளிக்கும். இடைத்தரகர்களை நாடுவதை விட, பட்டய கணக்காளர்களை நாடுவதே சிறந்தது.அவர்கள், அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றுவர் என்பதால், நிறுவனங்கள், வங்கி கடன் பெறுவது உட்பட, வணிக வளர்ச்சிக்கான முயற்சிகளை, சுலபமாக மேற்கொள்ள முடியும்.வங்கியில் சுலபமாக கடன் பெற, அதற்கான விண்ணப்ப நடைமுறைகளை சுலபமாக்க வேண்டும்.அது போல, வங்கிகள், கடன் வழங்கும் போது பின்பற்றும் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளையும் எளிமைப்படுத்த வேண்டும். வங்கிகளின் வாராக்கடன் சுமை பெருக, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம். அவற்றிலும், சொற்ப நிறுவனங்களிடம் இருந்து தான், பெருமளவு வாராக்கடன்வசூலிக்க வேண்டி உள்ளது.இது போன்ற நிறுவனங்களால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.வங்கிகள், பாதுகாப்பு கருதி, சிறிய நிறுவனங்களுக்கு கடன் வழங்க தயங்குகின்றன. இது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வளர்ச்சியில் முக்கிய பங்குமொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் பங்களிப்பு, 6 சதவீதமாக உள்ளது. இத்துறை, தொழில் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தியில், 40 சதவீதம்; ஏற்றுமதியில், 45 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.இந்தியாவில், 5.10 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம், பல கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்துறை, வேலைவாய்ப்பில், வேளாண் துறைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.நாட்டின் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றி வருகிறது.– சந்திரசேகர் கோஷ்நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, பந்தன் வங்கி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|