பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
08:28
இந்திய பங்குச் சந்தைகளான, தேசிய மற்றும் மும்பை சந்தைகளின் குறியீட்டு எண்கள், வரலாற்று உச்சத்தை தொட்டு, வர்த்தகம் நடைபெறுகிறது. கடந்த வாரம், ‘நிப்டி’ 10,115 என்ற உச்சத்தை தொட்டு, முடிவில், 10,014 என்ற நிலையில் முடிவுற்றது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் தொடரும் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டில் குறைவான பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியை, ஜி.எஸ்.டி., ஊக்குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்றவை, சந்தை வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தது. ஆக., 2ல் வெளிவர உள்ள, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, வரவிருக்கும் நிறுவனங்களின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கைகள், ஜூலையில் வாகனங்களின் விற்பனை நிலவரம், தொழில் துறை வளர்ச்சி விபரம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி விகிதத்துக்கான கூட்டம் ஆகியவை, இதில் அடங்கும்.
தொழிற்சாலை உற்பத்தியில், தொடர்ந்து தொய்வு காணப்படுகிறது. இச்சூழலில், வட்டி விகித குறைப்பு, சந்தையில் ஏற்றத்தை உண்டாக்கும். மேலும், வாகன விற்பனையில், ஜூலையில் ஏற்றம் காணப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்விபரம், வார இறுதியில் வெளிவர உள்ளது. முன்னணி நிறுவனங்களான, மகிந்திரா அண்டு மகிந்திரா, லுாபின் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை வர உள்ளது.
ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்திய பின், பணவீக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை, அதன் முதல் சுற்றில், அனைத்து பகுதிகளிலும் மழையை பொழிந்தது. இவை, சந்தைக்கு சாதகமான போக்குக்கு வழிவகுத்தது.அமெரிக்க பங்குச் சந்தைகள், அதன் உச்சத்தில் வியாபாரமாகிறது. வட்டி விகித கமிட்டி, நடப்பு ஆண்டில், மீண்டும் ஒருமுறை வட்டி விகிதத்தை உயர்த்த, 50 சதவீத வாய்ப்பே இருப்பதாக தெரிகிறது. இந்த வாரம், தேசிய பங்குச் சந்தை நிப்டியின், ரெசிஸ்டென்ஸ், 10,135 மற்றும் சப்போர்ட், 9,915 – 9,850 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்கர்நாடகா பேங்க்,குரு பைனான்ஸ்,டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்டு,கெடிலா ஹெல்த்கேர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|