சிறிய நிறுவனங்களுக்கு ‘பந்தன்’ வங்கி அறிவுரை சிறந்த ஆடிட்டரை அமர்த்தினால் மிக சுலபமாக கடன் பெறலாம்சிறிய நிறுவனங்களுக்கு ‘பந்தன்’ வங்கி அறிவுரை சிறந்த ஆடிட்டரை ... ... வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி? வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­திய ஆர்ப்­பாட்­ட­மில்­லாத சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
08:33

இந்த வாரம், இந்­திய பங்­குச் சந்தை வர்த்­த­கம், புதிய உச்­சத்தை தொட்­டு­விட்டு, சற்றே இறக்­கம் கண்டு முடிந்­தது. பல ஆண்­டு­க­ளாக எதிர்­பார்க்­கப்­பட்ட, ‘நிப்டி’ மைல்­கல் ஆன, 10 ஆயி­ரம் புள்­ளி­களை, சந்தை எளி­தில் கடந்­தது.

இந்த சாதனை ஒரு­பு­றம் இருக்க, அது நடந்த விதம், சந்­தை­யின் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு பெரும் ஆச்­ச­ரி­யத்தை தந்­தது. பொது­வாக, சந்­தை­யின் இத்­த­கைய சாத­னை­கள், பெரும் ஆர்ப்­பாட்­டங்­களை ஏற்­ப­டுத்­தும். ஆனால், இம்­முறை எந்த பர­ப­ரப்­பும், ஆர்ப்­பாட்­ட­மும் இன்றி, சந்தை புதிய உச்­சத்தை தொட்­டது.முக்­கி­ய­மாக, தனி­யார் வங்கி நிறு­வ­னங்­களின் அப­ரி­மி­த­மான காலாண்டு லாபக் கணக்­கு­கள் ஏற்­ப­டுத்­திய நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில், இந்த நிகழ்வு நடந்­தது. இது, சந்தை நகர்­வின் அடிப்­ப­டைத் தன்­மையை உறுதி செய்­கிறது.

பண வரத்துதொடர்ந்து வெளி வரும் நிறு­வ­னங்­களின் காலாண்டு லாபக் கணக்­கு­களின் தாக்­கம், சந்­தை­யின் குறு­கிய கால போக்கை நிர்­ண­யிக்­கும் என்­றா­லும், சந்­தை­யின் இந்த நகர்­வுக்கு, பண வரத்­தும் மிக முக்­கிய கார­ணம் என்­ப­தை­யும் மன­தில் கொள்ள வேண்­டும். இந்­திய சந்­தை­யின் பண வரத்து, தொடர்ந்து உயர்ந்து வரு­கிறது. பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­களும், இந்­திய பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­களும், தொடர்ந்து நம் சந்­தை­யில் முத­லீடு செய்­யும் சூழலே நில­வு­கிறது.

பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 2,223 கோடி ரூபாய்க்­கும், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 2,640 கோடி ரூபாய்க்­கும், இந்­திய பங்­கு­களை, கடந்த வாரம் வாங்­கி­னர். இரு­த­ரப்­பும் வாங்­கும் மன­நி­லை­யில் தொடர்ந்து இருப்­பின், சந்தை பெரும் சரிவை காண்­பது அரிது. பெரு முத­லீட்­டா­ளர்­களின் பங்கு விற்­ப­னையே இறக்­கத்­திற்கு வித்­தி­டும். ஆனால், அதற்­கான உட­னடி அறி­கு­றி­கள் உள்­நாட்டு நிகழ்­வு­க­ளி­லி­ருந்து தென்­ப­ட­வில்லை. இலக்கை விட குறைந்த பண­வீக்­கம், எதிர்­பார்ப்பை விட அதி­க­மான காலாண்டு லாபம் காண்­பிக்­கும் நிறு­வ­னங்­கள், சந்­தைக்கு வரும், 5,000 கோடி ரூபாய் மாதாந்­திர சேமிப்பு, தனி­யார் வங்­கி­கள் தீர்வு காணும் வாராக்­க­டன் என, சந்­தைக்கு சாத­கம் தரும் பல அம்­சங்­கள் இருக்­கின்றன. இனி வரும் மாதங்­களில், பண வரத்து இதே போல் இருப்­பின், சந்தை தொடர்ந்து புதிய உச்­சங்­களை கடந்து செல்ல வாய்ப்பு அதி­கம் என்றே சொல்ல வேண்­டும்.

உயர்ந்துள்ளது
ஆனா­லும், உலக சந்­தை­யின் பார்வை என்ன என்­பதை, நாம் கூர்ந்து ஆய்வு செய்ய வேண்­டும். உலக சந்­தை­யின் மதிப்பு, வர­லாறு காணாத அளவு உயர்ந்து நிற்­கிறது. இதை, உலக சந்­தை­யின் வல்­லு­ன­ரான, ஹவர்ட் மார்க்ஸ், மிகச் சிறந்த தன் கட்­டு­ரை­யில் விளக்கி உள்­ளார். மதிப்பு சாரா முத­லீ­டு­களின் தாக்­கம் எப்­படி நஷ்­டத்­தில் முடி­ய­லாம் என்­ப­தை­யும், சந்­தை­யின் அச்­ச­மின்மை ஏற்­ப­டுத்­தக் கூடிய விளை­வு­கள் பற்­றி­யும், குறிப்­பிட்ட சில உலக பங்­கு­களில், எப்­படி பணம் மிக அதி­க­மாக குவிந்­தி­ருக்­கிறது என்­ப­தை­யும், அதிக மதிப்­பீட்­டில் உள்ள அமெ­ரிக்க சந்­தையை விட்டு வெளி­யேற முத­லீட்­டா­ளர்­கள் காட்­டும் பிடி­வா­தத்­தை­யும், மிகத் தெளி­வாக, மார்க்ஸ் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

கடந்த, 2008ல் இவர் எழு­திய கட்­டுரை, வர­வி­ருந்த அமெ­ரிக்க சந்­தை­யின் வீழ்ச்­சியை, மிகத் தெளி­வாக முன்­னி­றுத்­தி­யது. இப்­போது வெளி வந்­தி­ருக்­கும் கட்­டு­ரை­யும், உலக சந்­தை­யில் இருந்து, நம் சந்­தைக்கு ஏற்­ப­டக் கூடிய பாதிப்பை, முன்­கூட்­டியே நமக்கு அறி­வு­றுத்­து­கிறது. மார்க்ஸ் தொடுத்­துள்ள வாதங்­கள், அமெ­ரிக்­கா­வுக்கு மட்­டு­மல்ல; நம் சந்­தைக்­கும் பொருந்­தும். நடை­மு­றை­யில், உல­கம் ஒரு சந்­தை­யாக இயங்­கு­வதே, இதற்கு முக்­கிய கார­ணம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)