மியூச்­சுவல் பண்ட் வளர்ச்­சி சிறிய நக­ரங்கள் முன்­னிலைமியூச்­சுவல் பண்ட் வளர்ச்­சி சிறிய நக­ரங்கள் முன்­னிலை ... உங்கள் இணை­ய­த­க­வல்­களை  பாது­காக்கும் வழி­மு­றைகள் உங்கள் இணை­ய­த­க­வல்­களை பாது­காக்கும் வழி­மு­றைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காப்­பீடு தொடர்­பாக புகார் செய்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
08:40

காப்­பீடு சேவை தொடர்­பாக அதி­ருப்­தியோ, முறை­யீடோ இருந்தால், அதை எழுத்துப் பூர்­வ ­மாக அளிக்க வேண்டும் என, இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) தெரி­வித்­துள்­ளது.

பாலி­சி­தா­ரர்­களின் நலன் காக்கும் வகையில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பு, அண்­மையில் புதிய விதி­மு­றை­க­ளுக்­கான அறி­க்கையை வெளி­யிட்­டது. கிளைம்­களை செட்டில் செய்­வது உள்­ளிட்ட அம்­சங்கள் தொடர்­பான நெறி­மு­றைகள் அடங்­கி­யுள்ள இந்த அறிக்­கையில், காப்­பீடு புகார் தொடர்­பா­கவும் தெளி­வுப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் படி, புகார் அல்­லது முறை­யீடு என்­பது காப்­பீட்டு நிறு­வனம், ஏஜன்ட் அல்­லது புரோக்கர் மீதான அதி­ருப்­திக்­கான எழுத்து பூர்­வ­மான வடிவம் என, குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த புகார் சேவை தரம் அல்­லது குறை­பாடு தொடர்­பான நட­வ­டிக்கை அல்­லது நட­வ­டிக்கை இன்மை தொடர்­பாக இருக்­கலாம்.

எழுத்­துப்­பூர்­வ­மான என குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பது முக்­கி­ய­மாக அமை­கி­றது. இதற்கு முன் வாய்­மொழி வடி­வி­லான புகாரும் இதில் அடங்கும். ஆனால் தற்­போது புகார் அல்­லது முறை­யீடு எழுத்து வடிவில் இருக்க வேண்டும் என்­பது அவ­சி­ய­மா­கி­றது. இ–மெயில் வடி­வமும் இதில் அடங்கும். எனவே எழுத்து வடிவில் புகாரை பதிவு செய்ய வேண்டும்.ஏஜன்ட் அல்­லது வங்கி மூலம் காப்­பீட்டு நிறு­வ­னத்­திடம் புகாரை பதிவு செய்­யலாம். அல்­லது நேர­டியாக காப்­பீட்டு நிறு­வ­னத்­திடம் புகார் செய்­யலாம். எல்லா காப்­பீட்டு நிறு­வ­னங்­களும் குறை தீர்ப்பு தொடர்­பான தங்கள் நடை­மு­றை­களை இணை­ய­த­ளத்தில் குறிப்­பிட்­டி­ருக்க வேண்டும்.

ஒரு சில காப்­பீட்டு நிறு­வன இணை­ய­த­ளங்­களில் வாடிக்­கை­யாளர் சேவை பகு­தியில் இந்த தக­வல்கள் இடம்­பெற்­றுள்­ளன. இ–மெயில் முக­வ­ரியும் இதில் இடம்­பெற்­றுள்­ளன. ‘கால்­சென்டர்’ வழி­யா­கவும் புகார் செய்­யலாம் என்­றாலும் அதை கடிதம் அல்­லது இ–மெயில் மூலம் உறுதி செய்ய வேண்டும். புகார் தெரி­வித்த, 3 நாட்­க­ளுக்குள் நிறு­வ­னங்கள் அதை அங்­கீ­க­ரிக்க வேண்டும்.காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­யத்தின் ஒருங்­கி­ணைந்த குறை­ தீர்க்கும் நிர்­வாக அமைப்­பான ஐ.ஜி.எம்.எஸ்., மூலமும் புகார் செய்­யலாம். அனைத்து காப்­பீட்டு நிறு­வ­னங்கள் தொடர்­பான புகார்­களின் மைய அமைப்­பாக இது இருக்­கி­றது. மேலும் தக­வல்­க­ளுக்கு: www.igms.irda.gov.in

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)