பதிவு செய்த நாள்
02 ஆக2017
10:59
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 111.31 புள்ளிகள் உயர்ந்து 32,668.48-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 23.20 புள்ளிகள் உயர்ந்து 10,137.85-ஆகவும் வர்த்தகமாகின.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சில்லரை பணவீக்கம் குறைந்திருப்பதும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாகவும், வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி குறைக்கும் என, தெரிகிறது. இதன்காரணமாக வர்த்தகம் சரிந்தன. காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 23 புள்ளிகள் சரிந்து 32,551-ஆகவும், நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 10,097-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|