பதிவு செய்த நாள்
02 ஆக2017
18:13
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, புதிய உச்சத்தை எட்டிய போதும், இறுதியில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை கூட்டம் நடந்ததால் அதன்மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ், நிப்டி உயர்வுடன் துவங்கி புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பின்னர் சரிந்த பங்குச்சந்தைகள், நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
குறிப்பாக ரெப்போ மற்றும் ரிவெர்ஸ் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட போதும் ரொக்க கையிருப்பு விகிதம் குறைக்கப்படாதது ஏமாற்றம் அளித்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 98.43 புள்ளிகள் சரிந்து 32,476.74-ஆகவும், நிப்டி 33.15 புள்ளிகள் சரிந்து 10,081.50-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|