பதிவு செய்த நாள்
03 ஆக2017
00:00
புதுடில்லி : விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை, இடைத்தரகர்கள் தயவின்றி விற்பனை செய்ய, ‘இ – ராகம்’ என்ற வலைதளத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எஸ்.டி.சி., மற்றும் சி.ஆர்.டபிள்யு.சி., நிறுவனங்கள் இணைந்து, இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளன.
இது குறித்து, இந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல், அவற்றை கொள்முதல் செய்யும் பல்வேறு அமைப்புகள் வரை, அனைவரையும், ‘இ – ராகம்’ வலைதளம் ஒன்றிணைக்கிறது. அனைத்து வேளாண் பொருட்களையும், ஏல முறையில் வாங்கவும், விற்கவும், இந்த வலைதளம் உதவும். வேளாண் பொருட்கள் விற்பனையில், விவசாயிகளுக்கு உதவ, நாடு முழுவதும், ‘இ – ராகம்’ மையங்கள் அமைக்கப்படும்.
இந்தியாவிலேயே, முதன்முறையாக, சிறிய கிராமங்களில் உள்ள விவசாயிகளை, தொழிற்நுட்ப வசதி மூலம், உலகின் மிகப்பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், அவர்களின் வேளாண் பொருட்களை விற்பனை செய்யவும், ‘இ – ராகம்’ வலைதளம் மற்றும் ‘இ – ராகம்’ மையங்கள் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பருப்பு விற்பனை:
‘இ – ராகம்’ வலைதளத்தில், முதன்முதலாக, பருப்பு வகைகள் ஏலம் விடப்படும். தற்போது கிடங்குகளில், 20 லட்சம் டன் பருப்பு வகைகள், வாங்குவாரின்றி தேங்கி உள்ளன. முதற்கட்டமாக, அவற்றை, வலைதளம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வலைதளம், விவசாயிகளுக்கு பெரிதும் உதவும். கல்வியறிவு இல்லாத விவசாயிகள், இந்த வசதியை பயன்படுத்துவதற்கு சற்று சிரமப்படுவர். எனினும், ‘இ – ராகம்’ மையங்கள் பரவலாகும் போது, பெருமளவு பயன் பெறுவர்.
-ராம்விலாஸ் பஸ்வான்,மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|