பதிவு செய்த நாள்
05 ஆக2017
06:51
புதுடில்லி : ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக செயல்பாடுகள் குறித்த அதிருப்தியை, நாராயணமூர்த்தி உள்ளிட்ட நிறுவனர்கள், சமீப காலமாக வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனம், பிற நிறுவனங்களை கையகப்படுத்தியது, ஒப்பந்தங்கள் வழங்கியது போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக, பிப்ரவரியில், மொட்டைக் கடிதங்கள் வெளியாகின.இதையடுத்து, இந்த புகார்கள் குறித்து, இன்போசிஸ், வெளி நிறுவனம் மூலம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என, நாராயணமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்க முடியாது என, மறுத்துள்ள இன்போசிஸ், விசாரணையில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என, வெளி நிறுவனம் தெரிவித்ததாக கூறியுள்ளது. எனினும், இன்போசிஸ் வலைதளத்தில் அறிக்கையின் சாராம்சம், வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|